Tamilnadu
"ஆடு நனையுதேனு ஓநாய் அழுதமாதிரி இருக்கு அண்ணாமலையின் பேச்சு" : அமைச்சர் மனோ தங்கராஜ் சாடல்!
தமிழ்நாட்டில் நேற்று 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திருவிதாங்கோடு அரசு நடுநிலைப் பள்ளிக்குச் சென்று பள்ளிக்கு வந்த மாணவர்களை இனிப்புகள் மற்றும் பூ கொடுத்து அமைச்சர் மனோ தங்கராஜ் வரவேற்றார்.
பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்துக்களுக்கு விரோதி தி.மு.க என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் மனோ தங்கராஜ், "ஆடு நனைகிறது என ஓநாய் அழுவதைபோல் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் பேச்சு உள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் மற்றும் அனைத்து சாதியினரும் ஆலயத்திற்குள் நுழையலாம் என்ற தி.மு.கவின் நிலைப்பாடு பா.ஜ.கவுக்கு பிடிக்கவில்லை.
இதனால், மத துவேஷத்தை உருவாக்கி தி.மு.கவின் வாக்கு வங்கியை கைப்பற்ற நினைக்கிறது பா.ஜ.க. இந்த எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. அனைத்துத் துறைகளிலும் மின்னணு வசதி ஆக்கப்படுவதால் தகுதியான மக்களுக்கு அரசு சேவைகள் சென்றடைய வழிவகுக்கும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது! : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !