Tamilnadu
"கூட்டுறவு பண்டக சாலையில் 4.5 கோடி மோசடி செய்த அ.தி.மு.க": பதிவாளரிடம் தொ.மு.ச புகார்!
சிவகங்கை மாவட்டத்தில் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை (பாம்கோ) செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு பண்டக சாலையில் அ.தி.மு.கவை சேர்ந்தவர்கள் பலர் நிர்வாகிகளாக உள்ளனர்.
இந்த பண்டக சாலையில் கிடைத்த வருமானம் மற்றும் அரசின் மானியம் மூலம் கிடைத்த தொகையில் ரூ.7 கோடி வரை மாவட்ட கூட்டுறவு வங்கி கிளைகள் மற்றும் இளையான்குடி நகர கூட்டுறவு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. இந்த பணத்தில் சுமார் 4.5 கோடி ரூபாயை வரை மோசடி செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாநில பதிவாளரின் அனுமதி இல்லாமல் தரம் குறைவான சேமியாவைக் கொள்முதல் செய்ததன் மூலம் பல லட்சம் கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தீபஒளி பண்டிகைக்காகத் தரமில்லாத பட்டாசுகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மோசடிகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என சிவகங்கை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை (பாம்கோ) பணியாளர்கள் தொழிலாளர் முன்னேற்றம் சங்கம் சார்பில், கூட்டுறவுச் சங்கங்களின் மாநில பதிவாளருக்குப் புகார் மனு அளித்துள்ளனர்.
Also Read
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”
-
”இந்தியப் பொருளாதாரத்தில் மந்தநிலை.. ஐ.நா.வின் கணிப்பு.. பொய் கூறுகிறாரா பிரதமர்?” - முரசொலி தலையங்கம்!
-
வேலியே பயிரை மேய்வதா? : விசாரணை என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட காவல் உதவி ஆய்வாளர்!
-
மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க நிர்வாகி : தமிழ்நாடு முழுவதும் தொடரும் அராஜகம்!
-
“ஆதவ் அர்ஜுனா அரசியலில் ஒரு கள்ள நாணயம்” : ஆர்.எஸ்.பாரதி சாடல்!