Tamilnadu
துப்பாக்கி காட்டி வழிபறியில் ஈடுபட்ட ரவுடி... சுற்றிவளைத்துப் பிடித்த போலிஸ்: நடந்தது என்ன?
மதுரை மாநகர் சம்மட்டிபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சரத்குமார். இவர் எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்துக்கு உட்பட்ட முத்துநகர் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மார்க்கெட் பகுதியில் நடந்து சென்ற ஹரிஹரசுதன் என்பவரைத் துப்பாக்கி காட்டி மிரட்டி பணம் மற்றும் தங்கச் செயின் பறித்துள்ளார்.
இதனையடுத்து ஹரிஹரசுதன் அளித்த புகாரின் அடிப்படையில், எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய போலிஸார், சுற்றித்திருந்தப் பிரபல ரவுடி சரத்குமாரைக் கைது செய்து அவரிடமிருந்து விசாரணை நடத்தினர்.
மேலும் அவரை சோதனை செய்த போது அவரிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களைப் பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் துப்பாக்கியை வைத்து வேறு ஏதும் குற்றச் செயல்களில் ஈடுபட்டாரா , துப்பாக்கி எங்கு இருந்து வாங்கப்பட்டது. என்பது குறித்து தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சரத்குமார் மீது கொலை கொலை முயற்சி கொலை வழிப்பறி உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !
-
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !
-
மீண்டும் மீண்டும் அவமானப்படும் மோடி! : பொய்களின் மேல் பொய்கள்!
-
"ரிங்கு சிங்கை அணியில் சேர்க்காதது மிகவும் கடினமான முடிவு" - தேர்வுக்குழு தலைவர் அகர்கர் கூறியது என்ன ?
-
தனியார்மயமாக்கலால் குறையும் அரசுப் பணிகள்! : மறைமுகமாக அழிக்கப்படும் இடஒதுக்கீடு!