Tamilnadu
துப்பாக்கி காட்டி வழிபறியில் ஈடுபட்ட ரவுடி... சுற்றிவளைத்துப் பிடித்த போலிஸ்: நடந்தது என்ன?
மதுரை மாநகர் சம்மட்டிபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சரத்குமார். இவர் எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்துக்கு உட்பட்ட முத்துநகர் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மார்க்கெட் பகுதியில் நடந்து சென்ற ஹரிஹரசுதன் என்பவரைத் துப்பாக்கி காட்டி மிரட்டி பணம் மற்றும் தங்கச் செயின் பறித்துள்ளார்.
இதனையடுத்து ஹரிஹரசுதன் அளித்த புகாரின் அடிப்படையில், எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய போலிஸார், சுற்றித்திருந்தப் பிரபல ரவுடி சரத்குமாரைக் கைது செய்து அவரிடமிருந்து விசாரணை நடத்தினர்.
மேலும் அவரை சோதனை செய்த போது அவரிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களைப் பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் துப்பாக்கியை வைத்து வேறு ஏதும் குற்றச் செயல்களில் ஈடுபட்டாரா , துப்பாக்கி எங்கு இருந்து வாங்கப்பட்டது. என்பது குறித்து தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சரத்குமார் மீது கொலை கொலை முயற்சி கொலை வழிப்பறி உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அச்சுறுத்தல்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பயப்பட மாட்டார்” : கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ள “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” நூல்!
-
எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு திராவிட மாடல் 2.O அமையும்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி அமைக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!