Tamilnadu
"தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் நிலவரம் என்ன?" : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள பாரதி தெருவில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான நவீன உடற்பயிற்சிக் கூடத்தை இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. 340 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் சுகாதார அலுவலர்கள் டெங்கு குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும், சுகாதார ஊழியர்கள் தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்றுவது, தினமும் கொசு மருந்து அடிப்பது, புகை மருந்து அடிப்பது, லார்வாக்களை அழிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பண்டிகைக் காலங்களில் தன்னார்வலர்கள் வந்தால் சுகாதாரத்துறையுடன் இணைந்து செயல்பட வாய்ப்பளிப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
நிபந்தயற்ற ஆதரவு! : “உண்மையில் தியாகம்தான்.. வரலாறு பாராட்டும்...” - கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் பாராட்டு!
-
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துலாம் தேவை இல்ல... - நெத்திப்போட்டில் அடித்த ஒன்றிய பாஜக அரசு! - விவரம்!
-
மகளிர் இட ஒதுக்கீடு : “வரவேற்றாலும், எங்கள் உரிமையை விட்டுத்தரமாட்டோம்!” - அதிரடி காட்டிய முதலமைச்சர்!
-
இனிதே நிறைவுற்ற பேச்சுவார்த்தை... திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? - விவரம்!
-
வேறு பெண்ணுடன் உறவு... தட்டிக்கேட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... அதிமுக பிரமுகர் மீது புகார்!