Tamilnadu
"56 ஆயிரம் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்" : மின் துறை அமைச்சர் சொன்ன மகிழ்ச்சி செய்தி!
தஞ்சாவூர் மாவட்டம், அற்புரதப் புரத்தில் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடக்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, "ஒவ்வொரு வீட்டிற்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது குறித்தும், மின் கணக்கீட்டாளர் பணி நியமனம் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இது குறித்தான அறிவிப்புகள் வெளியாகும்.
மின்கம்பிகள் அறுந்து விழுந்து உயிரிழப்பு ஏற்படுவது துரதிர்ஷ்டமானது. வரக்கூடிய காலங்களில் இப்படி நடைபெறாமல் இருக்க தரமான மின் கம்பிகள் அமைக்கப்படும்.
மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக மின் நிலையங்களைத் தரம் உயர்த்த ரூ.163 கோடியில் திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. மின்வாரியம் ரூ.1லட்சத்து 56 ஆயிரம் கோடி கடனில் உள்ளது.
எனினும் மின்வாரியத்தில் 56 ஆயிரம் காலிப் பணியிடங்கள் முன்னுரிமையின் அடிப்படையில் விரைவில் நிரப்பப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!