Tamilnadu
"56 ஆயிரம் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்" : மின் துறை அமைச்சர் சொன்ன மகிழ்ச்சி செய்தி!
தஞ்சாவூர் மாவட்டம், அற்புரதப் புரத்தில் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடக்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, "ஒவ்வொரு வீட்டிற்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது குறித்தும், மின் கணக்கீட்டாளர் பணி நியமனம் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இது குறித்தான அறிவிப்புகள் வெளியாகும்.
மின்கம்பிகள் அறுந்து விழுந்து உயிரிழப்பு ஏற்படுவது துரதிர்ஷ்டமானது. வரக்கூடிய காலங்களில் இப்படி நடைபெறாமல் இருக்க தரமான மின் கம்பிகள் அமைக்கப்படும்.
மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக மின் நிலையங்களைத் தரம் உயர்த்த ரூ.163 கோடியில் திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. மின்வாரியம் ரூ.1லட்சத்து 56 ஆயிரம் கோடி கடனில் உள்ளது.
எனினும் மின்வாரியத்தில் 56 ஆயிரம் காலிப் பணியிடங்கள் முன்னுரிமையின் அடிப்படையில் விரைவில் நிரப்பப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
உணவக உரிமையாளரை தாக்கிய பா.ஜ.க நிர்வாகி கைது : போலிஸ் அதிரடி
-
போலிஸ் பாதுகாப்பிற்கு ஆசைப்பட்டுப் பொய் புகார் : வசமாகச் சிக்கிய இந்து முன்னணி நிர்வாகி!
-
”மதத்தை வைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கும் மோடி” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
-
”மணிப்பூரில் ஓராண்டாக அமைதியைக் கொண்டுவர மறுத்து விட்ட பா.ஜ.க” : ப.சிதம்பரம்!
-
இன்றுடன் ஓராண்டாக நீடிக்கும் மணிப்பூர் வன்முறை : வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!