Tamilnadu
"56 ஆயிரம் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்" : மின் துறை அமைச்சர் சொன்ன மகிழ்ச்சி செய்தி!
தஞ்சாவூர் மாவட்டம், அற்புரதப் புரத்தில் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடக்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, "ஒவ்வொரு வீட்டிற்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது குறித்தும், மின் கணக்கீட்டாளர் பணி நியமனம் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இது குறித்தான அறிவிப்புகள் வெளியாகும்.
மின்கம்பிகள் அறுந்து விழுந்து உயிரிழப்பு ஏற்படுவது துரதிர்ஷ்டமானது. வரக்கூடிய காலங்களில் இப்படி நடைபெறாமல் இருக்க தரமான மின் கம்பிகள் அமைக்கப்படும்.
மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக மின் நிலையங்களைத் தரம் உயர்த்த ரூ.163 கோடியில் திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. மின்வாரியம் ரூ.1லட்சத்து 56 ஆயிரம் கோடி கடனில் உள்ளது.
எனினும் மின்வாரியத்தில் 56 ஆயிரம் காலிப் பணியிடங்கள் முன்னுரிமையின் அடிப்படையில் விரைவில் நிரப்பப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“உலகத்திலேயே முதன்முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம்!” : உதயநிதி பெருமிதம்!
-
தமிழ்நாட்டில் சூரிய மின்சக்தி பூங்காக்கள் அமைக்க வேண்டும் : நாடாளுமன்றத்தில் ஆ.மணி MP வலியுறுத்தல்!
-
பொள்ளாச்சி ரயில் நிலையங்களை சேலம் கோட்டத்திற்கு மாற்றுவது எப்போது : திமுக MP ஈஸ்வரசாமி கேள்வி!
-
ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்திற்கு பதில் சொல்ல முடியாது : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
வாடகை வீட்டில் பெண்களுக்கு Scan.. கருவின் பாலினம் குறித்து கூறி வந்த பெண் உள்பட 3 பேர் சேலத்தில் கைது!