Tamilnadu
"ஆவினில் நாட்டு மாட்டுப் பால் மட்டுமின்றி ஆட்டுப் பாலும் விற்கப்படும்" : அமைச்சர் நாசர் தகவல்!
வருங்காலங்களில் ஆவினில் நாட்டு மாட்டுப் பால் மட்டுமின்றி ஆட்டுப் பாலும் விற்கப்படும் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அனைத்துத் துறைகளிலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் பால்வளத்துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்ற நிலையில், லாபநோக்கில் செயல்படும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்.
பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “ஆவின் பாலை அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்றால் என்னிடமோ, ஆவின் நிறுவனத்தின் தொலைபேசி எண்ணிற்கோ மக்கள் புகார் தெரிவிக்கலாம். அதனை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்ற 11 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஆவினில் விரைவில் நாட்டு மாட்டுப்பால் விற்பனைக்கு கொண்டுவரப்படும். தற்போது அனைத்து வகை சாதி மாடுகளின் பால் ஏ-1 பால் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.
நாட்டு மாட்டுப் பால் விற்பனை செய்தால் அதை ஏ-2 பால் என்று தனியாக விற்பனை செய்யப்படும். இதற்காக தனியாக பால் பாத்திரங்கள், எந்திரங்கள் உபயோகப்படுத்தப்பட வேண்டும். தனி கண்டெய்னரில் இந்த பாலை ஆவின் நிறுவனத்துக்கு கொண்டு வந்து தனியாக பாக்கெட் தயாரித்து விற்க வேண்டும். எனவே நாட்டு மாட்டுப் பால் விலை அதிகமாக இருக்கும்.
மேலும், ஆட்டுப்பாலும் ஆவினில் விற்பனைக்கு கொண்டுவரப்படும். இதுபற்றி மக்களிடம் கருத்து கேட்டு முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று முடிவு செய்யப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
பொள்ளாச்சியில் ரூ.9.83 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“மேற்கிலும் தி.மு.க தான் Best! இந்த எழுச்சிதான் அதற்கு உதாரணம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம்... திமுக குழுவுடன் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆலோசனை!
-
திராவிட மாடல் ஆட்சியில் இந்து அறநிலையத்துறையின் சாதனை... பட்டியலிட்டு தமிழ்நாடு அரசு பாராட்டு.. - விவரம்!
-
“எமர்ஜென்சியையே பார்த்த இயக்கம் திமுக; உங்களின் சித்து விளையாட்டிற்கு அஞ்சமாட்டோம்”: முதலமைச்சர் ஆவேசம்!