Tamilnadu
‘சீக்கிரம் நடங்க பாஸூ’.. குழியில் சிக்கிய யானை குட்டி: 7 மணி நேரம் போராடி தாயுடன் சேர்த்து வைத்த வனத்துறை
நீலகிரி மாவட்டம் பந்தலூர் சரகத்தில் உள்ள தங்கம் சுரங்கம் பகுதியில் உள்ள ஒரு குழியில் குட்டி யானை சத்தம் கேட்டுள்ளது. இதை அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கிருந்த குழியில் பிறந்த ஒரு மாதம் ஆன பெண் யானைக்குட்டி ஒன்று குழியில் சிக்கி இருப்பதை பார்த்த வனத்துறையினர் கால்நடை மருத்துவ குழு உதவியுடன் குழியிலிருந்து மீட்டெடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து வனப்பகுதி முழுவதும் தாய் யானையை தேடும் பணியில் ஈடுபட்டு சுமார் 7 மணி நேரம் போராடி பிறந்த குட்டி யானையை தாய் யானையுடன் சேர்த்து வைத்தனர். குட்டியை பார்த்தவுடன் தாய் யானை, பாசத்துடன் ஓடிவந்து குட்டி யானையை அழைத்து சென்றது. இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!