Tamilnadu
‘சீக்கிரம் நடங்க பாஸூ’.. குழியில் சிக்கிய யானை குட்டி: 7 மணி நேரம் போராடி தாயுடன் சேர்த்து வைத்த வனத்துறை
நீலகிரி மாவட்டம் பந்தலூர் சரகத்தில் உள்ள தங்கம் சுரங்கம் பகுதியில் உள்ள ஒரு குழியில் குட்டி யானை சத்தம் கேட்டுள்ளது. இதை அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கிருந்த குழியில் பிறந்த ஒரு மாதம் ஆன பெண் யானைக்குட்டி ஒன்று குழியில் சிக்கி இருப்பதை பார்த்த வனத்துறையினர் கால்நடை மருத்துவ குழு உதவியுடன் குழியிலிருந்து மீட்டெடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து வனப்பகுதி முழுவதும் தாய் யானையை தேடும் பணியில் ஈடுபட்டு சுமார் 7 மணி நேரம் போராடி பிறந்த குட்டி யானையை தாய் யானையுடன் சேர்த்து வைத்தனர். குட்டியை பார்த்தவுடன் தாய் யானை, பாசத்துடன் ஓடிவந்து குட்டி யானையை அழைத்து சென்றது. இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!