Tamilnadu
’சாகும் வரை ஜெயில்தான்’ : பாலியல் குற்றவாளிகளுக்கு கடலூர் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான அரசு அமைந்ததில் இருந்து பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் மீது தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக பாலியல் வன்கொடுமை சார்ந்த வழக்குகள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், கடலூர் மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி 14 வயது சிறுமிக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடியைச் சேர்ந்த குணசேகரன் என்ற திலகர், கட்டமணியார் என்ற ஜெய்சங்கர் இருவரும் தனியாகச் சென்ற சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் ஈடுபட்டனர். இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர் சேத்தியாத்தோப்பு போலிஸார்.
பின்னர் இந்த வழக்கு கடலூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு மீது நீதிபதி எழிலரசி இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அதில், மேற்குறிப்பிட்ட குற்றவாளிகள் இருவருக்கும் இயற்கையாக மரணம் அடையும் வரை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!