Tamilnadu
“அதிவேகமாக சென்ற ஷேர் ஆட்டோ தடுப்பு சுவரில் மோதி விபத்து” : தாயைக் காண வந்த புதுமாப்பிள்ளை பலி!
தாம்பரம் பேரூந்து நிலையத்தில் இருந்து பெருங்களத்தூரை நோக்கி சென்ற ஷேர் ஆட்டோ, தாம்பரம் அடுத்த இரும்புலியூரில் அதிவேகமாக சென்றபோது, அட்டோ அருகே ஆம்னி பேருந்து வந்துள்ளது. அதனை கண்ட ஆட்டோ ஓட்டுனர் வலதுபுறம் திருப்ப முயன்றபோது, கட்டுப்பாடை இழந்து சாலையில் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துகுள்ளானது.
இதில் ஆட்டோ இரண்டு முறை குட்டிக்கரணம் அடித்து எதிர் திசையில் விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி கடலூரை சேர்ந்த பாதிரியார் ஐசக்ராஜ், பாண்டிச்சேரியை சேர்ந்த சுந்தர்ராஜ், நாகமுத்து ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த ஏழுமலை, ஆனந்த்குமார், ரஜினிகாந்த உள்ளிட்ட 5 பேர் சென்னை அரசு மருத்துவமனையில் சிக்கிசை பெற்றுவருகிறர்கள்.
பாண்டிச்சேரியை சேர்ந்த நாகமுத்துவிற்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் குன்றத்தூரில் உள்ள அவரின் அம்மாவைப் பார்த்துவிட்டு பாண்டிச்சேரி செல்ல முற்பட்டபோது விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
Also Read
-
மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது! : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !