Tamilnadu
“துப்பாக்கி எடுத்து சுட்டுருவேன்” : விசாரணைக்கு சென்ற போலிஸாரை மிரட்டிய முதியவர் : என்ன நடந்தது?
சென்னை, கோயம்பேடு சீனிவாச நகரைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரது தங்கை ராஜலட்சுமி. இவர்கள் இருவருக்கும் சொத்து தகராறு உள்ளது. இதனால் ராஜலட்சுமியை, இளங்கோவன் வீட்டிலிருந்து துரத்தியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ராஜலட்சுமி கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இவரின் இந்த புகார் அடிப்படையில், உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையில் போலிஸார் இளங்கோவன் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, இளங்கோவன் போலிஸார் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அப்போது அவர், “காவல்துறையின் உயர் அதிகாரிகள் எனக்குத் தெரியும். என் மீது நடவடிக்கை எடுத்தால் உனது வேலை போய்விடும். எனவே நீங்கள் இங்கிருந்து கிளம்புங்கள்.
இல்லை என்றால் என்னிடம் துப்பாக்கி உள்ளது. உங்களை சுட்டுக்கொலை செய்துவிடுவேன். விசாரணைக்கு எல்லாம் என்னால் வரமுடியாது என் வீட்டிலிருந்து நீங்க எல்லோரும் வெளியேறுங்கள்” என பேசியுள்ளார்.
போலிஸாரை மிரட்டும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலிஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளங்கோவைக் கைது செய்ய போலிஸார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Also Read
-
துணைவேந்தர் தேடல் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி… பாஜக-வுக்கு பணியும் தவெக : திமுக எம்.பி. வில்சன் கண்டனம்!
-
மக்களை மட்டுமல்ல யானைகளின் உயிரிழப்பை தடுத்தள்ள தி.மு.க- வின் தொலைநோக்கு திட்டம் : நடந்தது என்ன?
-
‘உரிமைத்தொகை’யால் உருவான மிகப்பெரிய பொருளாதார மாற்றம்! : பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தகவல்!
-
அமைச்சர் கீர்த்தனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : குழந்தை உரிமைகள் தேசிய ஆணையத்திற்கு சல்மா MP கடிதம்!
-
கரூர் விவகாரம் : ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் - சிபிஐக்கு திமுக புகார் மனு!