Tamilnadu
இரவோடு இரவாக விநாயகர் சிலை வைக்க முயற்சி: தடுத்து நிறுத்திய போலிஸாரிடம் இந்து முன்னணி தகராறு!
கரூர் நகரில் நள்ளிரவு 12.30 மணியளவில் இந்து முன்னணி சார்பில் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் மற்றும் வ.உ.சி தெரு உள்ளிட்ட இரண்டு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு சிலைகள் வைக்க எடுத்துச் சென்றனர்.
கொரனோ பரவல் காரணமாக பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட ஒன்றிய அரசே தடை விதித்திருந்த நிலையில் தடையை மீறி நான்கரை அடி உயர விநாயகர் சிலையை வைக்க முற்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் முன்பு வைக்கப்பட்டிருந்த சிலையை போலிஸார் அப்புறப்படுத்தினர். அதனை தொடர்ந்து வ.உ.சி தெரு பகுதியில் சிலையை வைக்க வாகனத்தில் எடுத்துச் சென்றனர்.
அங்கேயும் சிலைகளை வைக்க அனுமதிக்காத போலிஸார் இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்தி சிலைகளை பறிமுதல் செய்ய முற்பட்டனர்.
அப்போது போலிஸாரிடம், இந்து முன்னணியினர் தகராறு செய்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளும் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து சிலைகளை போலிஸார் பறிமுதல் செய்து கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வைத்தனர்.
Also Read
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!