Tamilnadu
“நிபா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை” : சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி!
கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் நிலையில் சிறுவன் ஒருவன் நிபா வைரஸ் தொற்றால் உயிரிழந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பால் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். இதனால் அந்த சிறுவனுடன் கடந்த பத்து நாட்களாகத் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தும் பணியில் கேரள சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், கேரளாவில் கண்டறியப்பட்ட நிபா வைரஸ் பாதிப்பு பற்றி மக்கள் அச்சப்பட வேண்டாம் என தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய ராதாகிருஷ்ணன், “கேரளாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால், தமிழ்நாடு எல்லைப்பகுதிகளில் தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் எல்லைப்பகுதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் பாதிப்புகள் குறித்துக் கண்காணித்து வருகிறோம்.
ஏற்கனவே கேரளாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டபோது அதை அந்த மாநில அரசு சிறப்பாக கட்டுப்படுத்தியது. தற்போதும் கேரளாவில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. கேரளாவில் பரவி உள்ள நிபா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
கனவுகள் கொண்ட இளைஞர்களுக்கு... “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளம் தொடக்கம்!
-
திராவிட மாடலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை! - முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்கு 11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் பாஜக வஞ்சிக்கிறது!” : முதலமைச்சர் உரை!
-
விழுப்புரம் மக்களுக்காக... ரூ.688.48 கோடியில் நலத்திட்ட உதவிகள்... அசத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!