Tamilnadu
“அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ தொகுதியில் ஒரு கல்லூரி கூட இல்லையா” : அமைச்சர் பொன்முடி விளாசல் !
கடந்த பத்து ஆண்டுகள் அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ தன் தொகுதிக்கு ஒரு கல்லூரியைக் கூட உருவாக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருப்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கேள்வி நேரத்தில் பேசிய அ.தி.மு.க உறுப்பினர் செல்லூர் ராஜூ, “மதுரை மேற்கு தொகுதியில் அரசு இருபாலர் கலைக்கல்லூரி அமைத்துத் தர வேண்டும்” என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “மதுரை மாவட்டத்தில் 2 அரசு கல்லூரிகள், 17 அரசு உதவி பெரும் கல்லூரிகள், 21 சுயநிதி கல்லூரிகள், 12 பொறியியல் கல்லூரிகள், 17 தொழில்நுட்ப கல்லூரிகள் இருக்கிறது.
ஆனால், பந்து ஆண்டுகளாக அமைச்சராக இருந்தவரின் தொகுதியில் ஒரு கல்லூரி கூட இல்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. கேட்பவரிடம் கேட்டால் தான் கிடைக்கும் என்பதை அறிந்த உறுப்பினர் செல்லூர் ராஜூ தற்போது முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கிறார். இவரின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகையை தடுக்க சிலர் சூழ்ச்சி செய்தார்கள்.. ஆனால்...” - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
5 ஆண்டுகளில் பிரம்மாண்டமான வளர்ச்சி... 10 அத்தியாயங்களை பட்டியலிட்ட பொருளாதார ஆய்வறிக்கை - முழு விவரம்!
-
மக்களின் பேராதரவோடு... 100 தொகுதிகளை நெருங்கும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை !
-
அருவருக்கத்தக்க பேச்சு.. திமுக பெண் MP-க்கள் முதல் திரிஷா வரை.. நயினார் நாகேந்திரனுக்கு குவியும் கண்டனம்!
-
“உயர்கல்வித்துறை சார்பில் ரூ.542.02 கோடியில் புதிதாக 15 கட்டடங்கள் திறப்பு!” : முழு விவரம் உள்ளே!