Tamilnadu
“அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ தொகுதியில் ஒரு கல்லூரி கூட இல்லையா” : அமைச்சர் பொன்முடி விளாசல் !
கடந்த பத்து ஆண்டுகள் அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ தன் தொகுதிக்கு ஒரு கல்லூரியைக் கூட உருவாக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருப்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கேள்வி நேரத்தில் பேசிய அ.தி.மு.க உறுப்பினர் செல்லூர் ராஜூ, “மதுரை மேற்கு தொகுதியில் அரசு இருபாலர் கலைக்கல்லூரி அமைத்துத் தர வேண்டும்” என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “மதுரை மாவட்டத்தில் 2 அரசு கல்லூரிகள், 17 அரசு உதவி பெரும் கல்லூரிகள், 21 சுயநிதி கல்லூரிகள், 12 பொறியியல் கல்லூரிகள், 17 தொழில்நுட்ப கல்லூரிகள் இருக்கிறது.
ஆனால், பந்து ஆண்டுகளாக அமைச்சராக இருந்தவரின் தொகுதியில் ஒரு கல்லூரி கூட இல்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. கேட்பவரிடம் கேட்டால் தான் கிடைக்கும் என்பதை அறிந்த உறுப்பினர் செல்லூர் ராஜூ தற்போது முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கிறார். இவரின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வன்முறை! : அலட்சியத்தின் உச்சத்தில் த.வெ.க அரசு!
-
உபா சட்ட வழக்குகளிலும் ஜாமீன் வழங்க தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
இளம்பெண் தலையில் கல்லால் கொடூரமாக தாக்கிய வாலிபர் : திருச்சி IG இல்லம் அருகே நடந்த அதிர்ச்சி!
-
“மாயாஜாலம் வளர்ச்சியைத் தராது” : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!
-
“இந்த திட்டங்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான்”: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!