Tamilnadu
“அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ தொகுதியில் ஒரு கல்லூரி கூட இல்லையா” : அமைச்சர் பொன்முடி விளாசல் !
கடந்த பத்து ஆண்டுகள் அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ தன் தொகுதிக்கு ஒரு கல்லூரியைக் கூட உருவாக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருப்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கேள்வி நேரத்தில் பேசிய அ.தி.மு.க உறுப்பினர் செல்லூர் ராஜூ, “மதுரை மேற்கு தொகுதியில் அரசு இருபாலர் கலைக்கல்லூரி அமைத்துத் தர வேண்டும்” என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “மதுரை மாவட்டத்தில் 2 அரசு கல்லூரிகள், 17 அரசு உதவி பெரும் கல்லூரிகள், 21 சுயநிதி கல்லூரிகள், 12 பொறியியல் கல்லூரிகள், 17 தொழில்நுட்ப கல்லூரிகள் இருக்கிறது.
ஆனால், பந்து ஆண்டுகளாக அமைச்சராக இருந்தவரின் தொகுதியில் ஒரு கல்லூரி கூட இல்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. கேட்பவரிடம் கேட்டால் தான் கிடைக்கும் என்பதை அறிந்த உறுப்பினர் செல்லூர் ராஜூ தற்போது முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கிறார். இவரின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
"டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற நடராஜன் தகுதியானவர்"- ஜாம்பவான் வீரர் கருத்து !
-
கர்நாடகாவுக்கு 3498 கோடி, தமிழ்நாட்டுக்கு வெறும் 276 கோடி நிதி ஒதுக்கீடு - ஒன்றிய அரசை விமர்சித்த வைகோ !
-
பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் Fail : வெளிவந்த பாஜக ஆளும் ம.பி அரசுப் பள்ளியின் அவலம் !
-
பிரசார பாடலுக்கு தடை : ஆம் ஆத்மியை குறிவைக்கும் தேர்தல் ஆணையம் ? - குவியும் கண்டனம் !
-
"அமேதியில் ராகுலுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வேன்" - வயநாடு தொகுதி CPI வேட்பாளர் ஆனி ராஜா பேட்டி !