Tamilnadu
“அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ தொகுதியில் ஒரு கல்லூரி கூட இல்லையா” : அமைச்சர் பொன்முடி விளாசல் !
கடந்த பத்து ஆண்டுகள் அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ தன் தொகுதிக்கு ஒரு கல்லூரியைக் கூட உருவாக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருப்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கேள்வி நேரத்தில் பேசிய அ.தி.மு.க உறுப்பினர் செல்லூர் ராஜூ, “மதுரை மேற்கு தொகுதியில் அரசு இருபாலர் கலைக்கல்லூரி அமைத்துத் தர வேண்டும்” என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “மதுரை மாவட்டத்தில் 2 அரசு கல்லூரிகள், 17 அரசு உதவி பெரும் கல்லூரிகள், 21 சுயநிதி கல்லூரிகள், 12 பொறியியல் கல்லூரிகள், 17 தொழில்நுட்ப கல்லூரிகள் இருக்கிறது.
ஆனால், பந்து ஆண்டுகளாக அமைச்சராக இருந்தவரின் தொகுதியில் ஒரு கல்லூரி கூட இல்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. கேட்பவரிடம் கேட்டால் தான் கிடைக்கும் என்பதை அறிந்த உறுப்பினர் செல்லூர் ராஜூ தற்போது முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கிறார். இவரின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு.. 12 மாநிலங்களில் நடத்தப்படும் SIR.. எந்தெந்த மாநிலங்கள்? எப்போது? - விவரம் !
-
SIR-க்கு ஆதரவு : தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த பழனிசாமி கும்பல்- திமுக IT Wing விமர்சனம்!
-
"மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த எந்தத் தடையும் இல்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
-
"வாக்குரிமையை பறிக்கும் SIR சதித் திட்டத்திற்கு எதிராக போராடிடுவோம்" - திமுக கூட்டணிக் கட்சிகள் அழைப்பு !
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!