Tamilnadu
6-வது முறையாக கிடைத்த வைரங்கள்.. விவசாயி தோட்டத்தில் தோண்ட தோண்ட கிடைக்கும் புதையல்!
மத்தியபிரதேச விவசாயி ஒருவர் 6-வது முறையாக ரூ.30 லட்சம் மதிப்புள்ள வைரத்தை தோண்டி எடுத்தார்.மத்தியபிரதேச விவசாயி ஒருவர் 6-வது முறையாக ரூ.30 லட்சம் மதிப்புள்ள வைரத்தை தோண்டி எடுத்தார்.மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் சிறு சிறு நிலங்களை உள்ளூர் விவசாயிகளுக்கு அம்மாநில அரசு குத்தகைக்கு கொடுத்திருக்கிறது. இந்நிலையில் அந்த பகுதியில் வைரம் இருப்பதாக கண்டுக்கப்பட்டு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்கள் மண்ணுக்குள் புதையுண்டு கிடப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தில் வைரம் கிடைத்தால் மாவட்ட சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவேண்டும். அவர் அதனை ஏலம் விட்டு கிடைக்கும் தொகையில் அரசுக்கு சேரவேண்டிய கட்டணம், வரி போக மீதத் தொகையை வைரத்தை எடுத்த நபரிடம் கொடுப்பார்.
இப்படி ஜாருபூர் கிராமத்தில் அரசிடம் குத்தகைக்குப் பெற்ற வைர குவாரியில் அகழ்வு பணியில் ஈடுபட்டிருந்தார், பிரகாஷ் மஜும்தார் என்ற விவசாயி. அவர், 6.47 கேரட் மதிப்புள்ள உயர்தரமான வைரக்கல்லை தோண்டி எடுத்திருக்கிறார். இவர், கடந்த 2 ஆண்டுகளில் ஏற்கனவே 5 முறை இதுபோல வைரம் அகழ்ந்து எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. விவசாயி பிரகாஷ் கண்டுபிடித்துள்ள வைரம் ஏலம் விடப்பட்டு, அந்த தொகை அவருக்கு வழங்கப்படும். அந்தவகையில் பிரகாசுக்கு ரூ.30 லட்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
Also Read
-
விஜய்க்கு ஊழலைப் பற்றி பேசுவதற்கு யோக்கியதை இருக்கிறது? - பட்டியலிட்டு பதிலடி கொடுத்த முரசொலி!
-
“ஒன்றிய அரசின் மிரட்டலுக்கு பயந்து IREL-க்கு அனுமதி அளித்த தவெக அரசு!” : திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் கண்டனம்!
-
வெறும் வாய்ச்சவடால்தான்... 50 நாட்கள் ஆட்சியில் 5 ஆணவப் படுகொலைகள்... அச்சத்தில் மக்கள்!
-
குதிரை பேரம் : முதலமைச்சர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம்!
-
VB-G RAM G திட்டத்தை அமல்படுத்த த.வெ.க அரசு துடிப்பது ஏன்? : தி.மு.க ஐடி விங் கேள்வி!