Tamilnadu
மூட்டை மூட்டையாக ரூ.20.50 லட்சம் குட்கா பதுக்கல்; கைதான பாஜக நிர்வாகி மீது பாய்ந்தது குண்டாஸ்!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி பகுதியில் ஜூலை 24ந்தேதி தம்மம்பட்டி போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோபால் என்பவரது தோட்டத்தில் ரூ20.50 லட்சம் மதிப்புள்ள ஒன்றை டன் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், பாஜக நகர வர்த்தகர் அணி செயலாளராக உள்ள தம்மம்பட்டி நடுவீதி பகுதியைச் சேர்ந்த பாண்டுரங்கன் மகன் பிரகாஷ் (45). இவர் பெங்களூருவில்இருந்து குட்காவை வாங்கி வந்து பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இவர் மீது வழக்குப்பதிவு செய்த தம்மம்பட்டி போலீஸார் பிரகாஷை கைது செய்தனர்.
இந்நிலையில் தற்போது பிரகாஷ் சேலம் மத்திய சிறையில் உள்ளார். இதையடுத்து அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் பரிந்துரையின்படி மாவட்டஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டார்.
Also Read
-
‘பிரான்ஸ் கேப்டன் எம்பாப்பே மீது இனவெறி தாக்குதல்.. பராகுவேவின் இழி மனநிலையா? குவியும் கண்டனங்கள்’
-
‘மிரட்டும் வயநாடு மண்சரிவு.. உயரும் பலி எண்ணிக்கை.. அடுத்த 24 மணி நேரம்..’ - வானிலை மையம் எச்சரிக்கை!
-
20 ஆண்டுகால கனவு நொறுங்கியது... கண்ணீருடன் முடிந்த உலகக் கோப்பை; ரொனால்டோ என்ற உணர்வின் கதை!
-
“அமைச்சர் கீர்த்தனாவின் ரீல்ஸ் மோகம்.. பள்ளிக்குழந்தைகளுக்கு அவமானம்” : கழக மகளிர் அணி கண்டனம்!
-
“வாக்குறுதியை நிறைவேற்றாத தவெக.. விவசாயிகளை ஏமாற்றினால்.. நீடிக்க முடியாது” : திமுக விவசாய அணி கண்டனம்!