Tamilnadu
மூட்டை மூட்டையாக ரூ.20.50 லட்சம் குட்கா பதுக்கல்; கைதான பாஜக நிர்வாகி மீது பாய்ந்தது குண்டாஸ்!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி பகுதியில் ஜூலை 24ந்தேதி தம்மம்பட்டி போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோபால் என்பவரது தோட்டத்தில் ரூ20.50 லட்சம் மதிப்புள்ள ஒன்றை டன் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், பாஜக நகர வர்த்தகர் அணி செயலாளராக உள்ள தம்மம்பட்டி நடுவீதி பகுதியைச் சேர்ந்த பாண்டுரங்கன் மகன் பிரகாஷ் (45). இவர் பெங்களூருவில்இருந்து குட்காவை வாங்கி வந்து பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இவர் மீது வழக்குப்பதிவு செய்த தம்மம்பட்டி போலீஸார் பிரகாஷை கைது செய்தனர்.
இந்நிலையில் தற்போது பிரகாஷ் சேலம் மத்திய சிறையில் உள்ளார். இதையடுத்து அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் பரிந்துரையின்படி மாவட்டஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டார்.
Also Read
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!