Tamilnadu
ஆன்லைன் ரம்மியால் இன்னொரு பலி: நண்பர்களிடம் கடன்வாங்கி ரூ.7 லட்சத்தை இழந்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞர்!
விழுப்புரத்தை அடுத்த சேந்தனுரைச் சேர்ந்தவர் பச்சையப்பன். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.
பச்சையப்பன் கடந்த சில நாட்களாக செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதற்காக நண்பர்களிடம் கடன் வாங்கியுள்ளார். ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டதால் சுமார் ஏழு லட்சம் ரூபாய் வரை பணத்தை இழந்துள்ளார்.
இதனால், கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார் பச்சையப்பன். இதுகுறித்து தனது மனைவியிடமும் புலம்பி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது பச்சையப்பன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து பச்சையப்பன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!