Tamilnadu
ஆன்லைன் ரம்மியால் இன்னொரு பலி: நண்பர்களிடம் கடன்வாங்கி ரூ.7 லட்சத்தை இழந்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞர்!
விழுப்புரத்தை அடுத்த சேந்தனுரைச் சேர்ந்தவர் பச்சையப்பன். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.
பச்சையப்பன் கடந்த சில நாட்களாக செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதற்காக நண்பர்களிடம் கடன் வாங்கியுள்ளார். ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டதால் சுமார் ஏழு லட்சம் ரூபாய் வரை பணத்தை இழந்துள்ளார்.
இதனால், கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார் பச்சையப்பன். இதுகுறித்து தனது மனைவியிடமும் புலம்பி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது பச்சையப்பன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து பச்சையப்பன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
தினமலரின் பொய் செய்தி! - அங்கன்வாடி மையங்கள் குறித்து விளக்கிய தமிழ்நாடு அரசு!
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !