Tamilnadu
பிரபலங்களை வைத்து கடைகளைத் திறப்பவர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்... அப்படி என்ன செய்துவிட்டார்?
புதிதாகக் கடை திறப்பவர்கள், தங்கள் கடை விரைவாக மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக நடிகர்கள் அல்லது பிரபலமானவர்களை வைத்து கடைகளைத் திறப்பது வழக்கம்.
தருமபுரி மாவட்டம், அரூர் பஜார் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் புதிதாக ஜவுளிக்கடை ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த கடையை யாரை வைத்து திறக்கலாம் என யோசித்தபோது, கொரோனா காலத்தில், தங்களது உயிரைத் துச்சமென கருதி மக்கள் பணியில் ஈடுபட்ட முன்களப் பணியாளர்களை வைத்து கடையைத் திறக்கலாம் என முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து தூய்மைப் பணியாளர் சாந்தி என்பவரை அழைத்து, கடையை ரிப்பன் வெட்டி திறக்க வைத்துள்ளார் செந்தில்குமார். மேலும் கடையில் முதல் விற்பனையையும் அவரே தொடங்கி வைத்தார். அதோடு அரூர் பேரூராட்சியில் பணிபுரியும் அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் இனிப்பு மற்றும் பரிசுகளை வழங்கி செந்தில்குமார் கவுரவித்துள்ளார்.
செந்தில்குமாரின் இந்தச் செயல், மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்காக அவரைப் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
Also Read
-
தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை விடுவிக்காதது ஏன்? : நாடாளுமன்றத்தில் பி.வில்சன் MP கேள்வி!
-
“மூத்த குடிமக்களுக்கான பயணக் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்” : ராஜாத்தி சல்மா MP வலியுறுத்தல்!
-
கேள்வி கேட்க வேண்டிய இடம் தானே நாடாளுமன்றம்? : ஒன்றிய அரசுக்கு முரசொலி சரமாரி கேள்வி!
-
பல்கலை. வேந்தர் நியமனம், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பாடம் புகட்டிய உச்சநீதிமன்றம்: செல்வப்பெருந்தகை காட்டம்!
-
2027 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா, விராட் கோலி… ஆதரவாக பேசிய தோனி! முழுவிவரம் உள்ளே!