Tamilnadu
ரூ.10 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க முயற்சி... மாஃபா பாண்டியராஜனின் ஆதரவாளர் மீது போலிஸில் புகார்!
சென்னை அடுத்த ஆவடியைச் சேர்ந்தவர் அபிஷேக். இவருக்குச் சொந்தமாக பருத்திப்பட்டு கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை விற்பனை செய்வதற்கான நடவடிக்கையில் அபிஷேக் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், மாஃபா பாண்டியராஜனின் ஆதரவாளர் உட்பட 30க்கும் மேற்பட்ட நபர்கள் அபிஷேக்கிற்குச் சொந்தமான நிலத்தில் அத்துமீறி நுழைந்து இது எங்களுக்குச் சொந்தமான இடம் எனக் கூறி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையடுத்து அபிஷேக் இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், "எனக்குச் சொந்தமான நிலத்தை நான்கு பேர் அபகரிக்க முயற்சிக்கிறார்கள். கட்டப்பஞ்சாயத்து செய்து மிரட்டி வருகிறார்கள்.
மேலும் இரண்டு கிரவுண்ட் நிலத்தைக் கொடுத்தால் பிரச்சனை முடித்துக்கொள்வோம். இல்லையென்றால் எதுவேண்டுமானாலும் நடக்கும்” என கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் ஆதரவாளர்கள் யுவராஜ் மற்றும் மனோகர், பா.ம.க நகரத் தலைவர் ஆனந்தன் ஆகியோர் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Also Read
-
“இவ்வளவுக்குப் பிறகும் மவுனமாக ஏன் இருக்கிறது? கர்நாடக அரசைப் பார்த்து பயமா?” - விஜய்க்கு முரசொலி கேள்வி!
-
“சட்டப்பேரவையில் தரம் தாழ்ந்து பேசாதீங்க”... : அமைச்சர் நிர்மல்குமாருக்கு கே.என்.நேரு பதிலடி!
-
த.வெ.க அரசு எந்தத் திசையில் செல்கிறது? : சர்ச்சை சுற்றறிக்கை - தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
வெளியாகும் சுற்றறிக்கை.. திரும்பப்பெறும் தவெக அரசு?.. முதல்வரை மிஞ்சிய சூப்பர் பவர் யார்? : திமுக கேள்வி!
-
“தவெக 100 நாள் ஆட்சி.. 18 சாதனைகள் இல்லை..பதினெட்டும் ஓட்டைகள்” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!