Tamilnadu
ரூ.10 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க முயற்சி... மாஃபா பாண்டியராஜனின் ஆதரவாளர் மீது போலிஸில் புகார்!
சென்னை அடுத்த ஆவடியைச் சேர்ந்தவர் அபிஷேக். இவருக்குச் சொந்தமாக பருத்திப்பட்டு கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை விற்பனை செய்வதற்கான நடவடிக்கையில் அபிஷேக் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், மாஃபா பாண்டியராஜனின் ஆதரவாளர் உட்பட 30க்கும் மேற்பட்ட நபர்கள் அபிஷேக்கிற்குச் சொந்தமான நிலத்தில் அத்துமீறி நுழைந்து இது எங்களுக்குச் சொந்தமான இடம் எனக் கூறி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையடுத்து அபிஷேக் இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், "எனக்குச் சொந்தமான நிலத்தை நான்கு பேர் அபகரிக்க முயற்சிக்கிறார்கள். கட்டப்பஞ்சாயத்து செய்து மிரட்டி வருகிறார்கள்.
மேலும் இரண்டு கிரவுண்ட் நிலத்தைக் கொடுத்தால் பிரச்சனை முடித்துக்கொள்வோம். இல்லையென்றால் எதுவேண்டுமானாலும் நடக்கும்” என கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் ஆதரவாளர்கள் யுவராஜ் மற்றும் மனோகர், பா.ம.க நகரத் தலைவர் ஆனந்தன் ஆகியோர் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!