Tamilnadu
வரவேற்பு பணி என அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூரம்... நடுரோட்டில் வெளுத்த இளம்பெண்!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. திருமணங்கள், விழாக்கள் போன்ற நிகழ்வுகளுக்கு வரவேற்புப் பணியில் ஈடுபடுவதற்காக இளம்பெண்களை அழைத்துச் செல்லும் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில், ராஜா நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லும் பெண்கள் சிலரை குறிவைத்து, ஆசை வார்த்தைகளைக் கூறி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். மேலும் தன்னிடம் பணியாற்றும் பெண்களை மதுபோதைக்கு அடிமையாக்கி பல வி.ஐ.பிக்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
மேலும் இந்த சம்பவத்திற்கு காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் சிலர் உடந்தையாக இருந்ததாகவும், காவல்நிலையத்தில் புகார் அளித்தால் தங்கள் மீது வழக்குப் பதிவு செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளனர். இந்த புகாரைத் தொடர்ந்து மாவட்ட காவல்கண்காணிப்பாளர் செந்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
மேலும் பாலியல் தொழிலுக்கு ராஜா பெண்களை அழைக்கும் ஃபோன் கால் ஆடியோவும், பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ராஜாவை தாக்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ராஜா மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
Also Read
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!
-
தேசிய நெடுஞ்சாலைகளில் மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்கள் : திமுக MP ராஜேஷ்குமார் வலியுறுத்தல்!
-
”அனல் மின் நிலையங்களுக்கு உரிய நிலக்கரி ஒதுக்கீடு வேண்டும்” : தமிழச்சி தங்கபாண்டியன் MP வலியுறுத்தல்!
-
“அரசமைப்பு திருத்தம் என்பது சீர்திருத்தம் அல்ல; சர்வாதிகாரத்தின் தொடக்கம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”கிராமங்களுக்கு அதிவேக இணைய வசதி” : நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி அ.மணி கோரிக்கை!