Tamilnadu
வறுமையின் அடையாளமா அரசுப்பள்ளி? பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியது என்ன?
அரசுப்பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல அது பெருமையின் அடையாளம் - பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு
தமிழ்நாடு சட்டமன்றத்தின் மூன்றாவது நாள் கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி பள்ளிக் கல்விக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்து பேசினார். அப்போது, “தற்போது வெளியிடப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை ஆறு மாதத்திற்கு மட்டுமே பொருந்தும். அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அடுத்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் அகவிலைப்படிக்காக ஆண்டுக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் நிது ஒதுக்கப்படுகிறது.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் துறைக்கு தேவையான அனைத்து நிதிகளையும் ஒதுக்குவதாக நிதி அமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார். அரசுப் பள்ளிகள் நவீன பள்ளிகளாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது அரசு பள்ளியில் வறுமையின் அடையாளம் அல்ல, அது பெருமையின் அடையாளம்.” எனக் கூறியுள்ளார்.
Also Read
-
விசிக வழங்கும் விருதுகள் பட்டியல் அறிவிப்பு : நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு அம்பேத்கர் சுடர் விருது !
-
73 ஆண்டுகளில் இல்லாத வெப்பம் : ஊட்டிக்கே இந்த நிலையா ? - கொதிக்கும் கோடை வெப்பம் !
-
பள்ளத்தில் கவிழ்ந்த கார் : இரவில் கணவன், மனைவிக்கு நேர்ந்த சோகம்!
-
"களத்தில் என்ன செய்யவேண்டும் என எனக்கு தெரியும்" - விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்த விராட் கோலி !
-
”போராடி பெற்ற நமது உரிமைகளை பறிக்கும் மோடி அரசு” : தீஸ்தா சீதல்வாட் குற்றச்சாட்டு!