Tamilnadu
வறுமையின் அடையாளமா அரசுப்பள்ளி? பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியது என்ன?
அரசுப்பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல அது பெருமையின் அடையாளம் - பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு
தமிழ்நாடு சட்டமன்றத்தின் மூன்றாவது நாள் கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி பள்ளிக் கல்விக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்து பேசினார். அப்போது, “தற்போது வெளியிடப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை ஆறு மாதத்திற்கு மட்டுமே பொருந்தும். அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அடுத்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் அகவிலைப்படிக்காக ஆண்டுக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் நிது ஒதுக்கப்படுகிறது.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் துறைக்கு தேவையான அனைத்து நிதிகளையும் ஒதுக்குவதாக நிதி அமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார். அரசுப் பள்ளிகள் நவீன பள்ளிகளாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது அரசு பள்ளியில் வறுமையின் அடையாளம் அல்ல, அது பெருமையின் அடையாளம்.” எனக் கூறியுள்ளார்.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!