Tamilnadu
ஒலிம்பிக் வெற்றியை இப்படியும் கொண்டாடலாம்.. மக்களுக்கு 1 டன் தக்காளியை இலவசமாக வழங்கிய இஸ்லாமிய வியாபாரி!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வந்த 32வது ஒலிம்பிக் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த ஒலிம்பிக்கில் 39 தங்கப்பதக்கத்துடன் மொத்தம் 113 பதக்கங்கள் வென்று அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது.
சீனா 88 பதக்கத்துடன் இரண்டாவது இடத்தையும், ஒலிம்பிக் தொடரை நடத்திய ஜப்பான் 58 பதக்கத்துடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தது. இந்தியா ஒரு தங்கத்துடன் மொத்தம் 7 பதக்கங்களைப் பெற்று 48வது இடத்தை பிடித்துள்ளது.
ஒலிம்பிக் வரலாற்றிலேயே டோக்கியோவில் பெற்ற பதக்கம் தான் அதிகம். மேலும் தடகளத்தில் 120 ஆண்டுகள் கழித்து இந்தியா தனிநபர் பிரிவில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. இந்த சாதனையைப் படைத்த நீரஜ் சோப்ராவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இந்தியாவின் ஒலிம்பிக் தங்கப் பதக்க வெற்றியைக் கொண்டாடும் விதமாகத் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்த காய்கறி கடை நடத்தி வரும் சேட்டான் என்பவர் பொதுமக்களுக்கு தலா இரண்டு கிலோ தக்காளியை இலவசமாக வழங்கி தனது மகிழ்ச்சியை மக்களுடன் பகிர்ந்து கொண்டார். இப்படி சுமார் 500 பேருக்கு ஒரு டன் தக்காளியை இலவசமாகக் கொடுத்துள்ளார்.
Also Read
-
4.29 லட்சம் வீடுகள்.. 25.56 லட்சம் பேருக்கு பட்டாக்கள்.. ஏழை மக்களின் கனவை நனவாக்கிய திராவிட மாடல்!
-
“நிதிஷ் குமாரின் கதியைப் பார்த்தாவது திருந்த வேண்டும்...” - பழனிசாமிக்கு முரசொலி தலையங்கம் அறிவுரை!
-
“கழக வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த திருச்சி மாநாடு...” - வரலாற்று சுவடுகளோடு முதலமைச்சர் மடல்!
-
சூடுபிடிக்கும் தேர்தல் களம்! : தி.மு.க சார்பில் போட்டியிட 15,372 விருப்ப மனுக்கள் தாக்கல்!
-
“நான் முதல்வனின் அடுத்த version-ல் சர்வதேச அளவிலான சாதனைதான்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!