Tamilnadu
ஒலிம்பிக் வெற்றியை இப்படியும் கொண்டாடலாம்.. மக்களுக்கு 1 டன் தக்காளியை இலவசமாக வழங்கிய இஸ்லாமிய வியாபாரி!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வந்த 32வது ஒலிம்பிக் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த ஒலிம்பிக்கில் 39 தங்கப்பதக்கத்துடன் மொத்தம் 113 பதக்கங்கள் வென்று அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது.
சீனா 88 பதக்கத்துடன் இரண்டாவது இடத்தையும், ஒலிம்பிக் தொடரை நடத்திய ஜப்பான் 58 பதக்கத்துடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தது. இந்தியா ஒரு தங்கத்துடன் மொத்தம் 7 பதக்கங்களைப் பெற்று 48வது இடத்தை பிடித்துள்ளது.
ஒலிம்பிக் வரலாற்றிலேயே டோக்கியோவில் பெற்ற பதக்கம் தான் அதிகம். மேலும் தடகளத்தில் 120 ஆண்டுகள் கழித்து இந்தியா தனிநபர் பிரிவில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. இந்த சாதனையைப் படைத்த நீரஜ் சோப்ராவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இந்தியாவின் ஒலிம்பிக் தங்கப் பதக்க வெற்றியைக் கொண்டாடும் விதமாகத் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்த காய்கறி கடை நடத்தி வரும் சேட்டான் என்பவர் பொதுமக்களுக்கு தலா இரண்டு கிலோ தக்காளியை இலவசமாக வழங்கி தனது மகிழ்ச்சியை மக்களுடன் பகிர்ந்து கொண்டார். இப்படி சுமார் 500 பேருக்கு ஒரு டன் தக்காளியை இலவசமாகக் கொடுத்துள்ளார்.
Also Read
-
மேகதாது அணை.. கர்நாடக செல்லும் முதல்வர் விஜய்.. வீடியோ போடலாம், விடியலைத் தராது: எச்சரிக்கும் முரசொலி!
-
“முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை!”: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!