Tamilnadu
“சாதி ரீதியாக தாக்குதல்... சமூக பதட்டத்தை உருவாக்கும் மீரா மிதுன்" : கைது செய்யக்கோரி போலிஸில் புகார்!
பிக்பாஸ் மூலம் மக்களிடையே பிரபலமானவர் மீரா மிதுன். இவர் தன்னை பிரபலமாகக் காட்டிக் கொள்வதற்கான நடிகர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து தனது சமூக வலைதளத்தில் சர்ச்சையாகப் பேசுவதை வழக்கமாக வைத்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெயரைக் குறிப்பிட்டு, இந்த சமூகத்தைச் சார்ந்த இயக்குநர்கள் மற்றும் திரை பிரபலங்கள்தான் தன்னுடைய முகத்தைப் பயன்படுத்துவதாகவும், இவர்களை எல்லாம் சினிமாவை விட்டு துரத்தவேண்டும் எனவும் மிக இழிவாகப் பேசியுள்ளார்.
இவரது இந்தப் பேச்சுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே திராவிட விடுதலை கழக மாவட்டச் செயலாளர் மா.பா.மணி அமுதன் மீரா மிதுனை கைது செய்யக் கோரி மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அவரது புகாரில், "மீரா மிதுனின் வீடியோ சமூக பதட்டத்தை உண்டாக்கும் விதமாக உள்ளது. எனவே அவரை தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து செய்து செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“ஆளுநரின் இந்த துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்” : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!