Tamilnadu
“இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற குழு இல்லை” : முதல்வருக்கு ‘ஜெர்மனி’ நாளேடு பாராட்டு!
தமிழகத்தில் முதலமைச்சருக்கு பொருளாதார விவகாரங்களில் ஆலோசனை கூற நிபுணர் குழு அமைக்கப்பட்டிருப்பதை ஜெர்மனியைச் சேர்ந்த ‘தி ஃப்ராங்க்பர்ட்டர் அல்ஜெமின் ஜெய்துங்’ (The Frankfurter Allgemeine Zeitung) என்ற நாளேடு பாராட்டியுள்ளது. இந்த நாளேடு 1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.
தமிழக முதல்வருக்கு ஆலோசனை கூற ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ, ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலாளர் நாராயணன், பேராசிரியர் ஜீன் ட்ரஸ் ஆகியோர் கொண்ட குழு அண்மையில் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதைப் பாராட்டி எழுதப்பட்ட கட்டுரையில், தமிழ்நாட்டில் தி.மு.க அரசு சீர்திருத்த முயற்சிகளில் ஒரு பகுதியாக பொருளாதார நிபுணர் குழு அமைத்துள்ளதாக ஜெர்மன் நாளேடு பாராட்டியுள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற குழு இல்லை என்றும் அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தின் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜனின் பொருளாதாரப் படிப்புகள் குறித்த விவரமும், அமெரிக்காவில் அவர் ஆற்றிய பணிகளும் இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளது.
Also Read
- 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
 - 
	    
	      
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!