Tamilnadu
உஷார்.. “வாட்ஸ்அப்பில் இப்படி ஒரு மெசேஜ் வந்தா நம்பாதீங்க” : மோசடி கும்பல் குறித்து போலிஸ் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் சில மாதங்களுக்கு முன்பு போலிஸ் அதிகாரிகள் பெயரில் மர்ம நபர்கள் போலியாக ஃபேஸ்புக்கில் தொடங்கி பலரிடம் பண மோசடி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷகீல்கான், ரவீந்தர்குமார் ஆகிய இரண்டு பேரைக் கைது செய்தனர்.
இந்நிலையில், பேஸ்புக்கில் எப்படி பண மோசடி செய்யப்பட்டதோ அதேபோன்று தற்போது வாட்ஸ்அப்பில் மர்ம நபர்கள் மோசடி செய்து வருவதை போலிஸார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் டி.ஜி.பி அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவரின் புகைப்படத்தை வாட்ஸ்அப் டி.பி.யாக வைத்து பண மோடி செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.
அந்த வாட்ஸ்அப்பில் நண்பருக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுகிறது. எனது போன்பே வேலை செய்யவில்லை. எனவே இந்த செல்போன் எண்ணுக்கு ரூபாய் 10 ஆயிரம் கூகுள் பே அனுப்புங்கள். நான் நாளை அனுப்பிவிடுகிறேன் என அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்த வாட்ஸ்அப் மெசேஜ் சென்றுள்ளது.
இதில் சந்தேகமடைந்த அவரது நண்பர்கள் சிலர் அவருக்குத் தொடர்புகொண்டு இதுகுறித்து கேட்டுள்ளனர். அப்போது தான் இந்த மோசடி குறித்து அவருக்குத் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலிஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். மேலும் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் போன்றவற்றில் வரும் தகவல்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என போலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
“மேற்கிலும் தி.மு.க தான் Best! இந்த எழுச்சிதான் அதற்கு உதாரணம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம்... திமுக குழுவுடன் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆலோசனை!
-
திராவிட மாடல் ஆட்சியில் இந்து அறநிலையத்துறையின் சாதனை... பட்டியலிட்டு தமிழ்நாடு அரசு பாராட்டு.. - விவரம்!
-
“எமர்ஜென்சியையே பார்த்த இயக்கம் திமுக; உங்களின் சித்து விளையாட்டிற்கு அஞ்சமாட்டோம்”: முதலமைச்சர் ஆவேசம்!
-
“மதத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் அற்பர்கள்...” : பாஜகவை வெளுத்து வாங்கிய முதலமைச்சர் !