Tamilnadu
“பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய மோசடி கும்பல் கைது” : திருப்பூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
திருப்பூரில் மசாஜ் சென்டர்கள் என்ற பெயரிலும் வீடுகளை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடப்பதாக மாநகர காவல்துறைக்கு புகார்கள் வந்ததை தொடர்ந்து ஆய்வுப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
திருமுருகன் பூண்டி, கூத்தம்பாளையம் ஜே.பி நகர் பகுதியில் உள்ள வீட்டில் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்பொழுது அந்த வீட்டில் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ், வசந்த் ஆகிய இருவரும் மூன்று பெண்களை ஏமாற்றி வெளி மாவட்டங்களில் இருந்து அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தபட்டது தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் வீட்டில் இருந்த மூன்று பெண்களையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகர காவல் துணை ஆணையர், அரவிந்த் திருப்பூர் மாநகரில் மசாஜ் சென்டர் என்ற பெயரிலும் தனி வீடுகளை வாடகைக்கு எடுத்தும் பாலியல் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் வருவதாகவும் மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதேபோன்று தொடர்ந்து மாநகரில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
Also Read
-
கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை... சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கிய மேயர் பிரியா !
-
120- க்கும் மேற்பட்ட தொலைந்த மொபைல் போன்களை மீட்டெடுத்த ரயில்வே துறை... சாத்தியமானது எப்படி ?
-
"SIR குறித்து மக்கள் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை" - தி.க தலைவர் கி.வீரமணி !
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!