Tamilnadu
“பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய மோசடி கும்பல் கைது” : திருப்பூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
திருப்பூரில் மசாஜ் சென்டர்கள் என்ற பெயரிலும் வீடுகளை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடப்பதாக மாநகர காவல்துறைக்கு புகார்கள் வந்ததை தொடர்ந்து ஆய்வுப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
திருமுருகன் பூண்டி, கூத்தம்பாளையம் ஜே.பி நகர் பகுதியில் உள்ள வீட்டில் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்பொழுது அந்த வீட்டில் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ், வசந்த் ஆகிய இருவரும் மூன்று பெண்களை ஏமாற்றி வெளி மாவட்டங்களில் இருந்து அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தபட்டது தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் வீட்டில் இருந்த மூன்று பெண்களையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகர காவல் துணை ஆணையர், அரவிந்த் திருப்பூர் மாநகரில் மசாஜ் சென்டர் என்ற பெயரிலும் தனி வீடுகளை வாடகைக்கு எடுத்தும் பாலியல் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் வருவதாகவும் மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதேபோன்று தொடர்ந்து மாநகரில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
Also Read
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!
-
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!