Tamilnadu
தாலியில் ’தமிழ்’ எனப் பொறித்து வள்ளுவரை சாட்சியாக கொண்டு கரம் பிடித்த இணையர்கள்!
சாதி, மதங்களை கடந்து அண்மைக் காலங்களாக முற்போக்கு சிந்தனைக் கொண்ட இணையேற்பு விழாக்கள் நடைபெறுவது வழக்கமாகி வருகிறது. குறிப்பாக நகரங்களில் தொடர்ந்து இணையேற்பு விழாக்களே நடைபெற்று வருகிறது.
தமிழர்களின் பெருமையை பறை சாற்றும் விதமாக பறை இசை ஒளித்தபடி மணமக்களான இணையர்களை வரவேற்கும் நிகழ்வும் தொடர்கிறது. சாஸ்திர சம்பிரதாயங்களற்ற இருமனம் ஒத்த இணையேற்பு விழாவுக்கு அனைவரிடத்திலும் வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படி இருக்கையில் ஓசூரைச் சேர்ந்தவர்களின் இணையேற்பு விழா ஒன்றில் மணமகள் அணியும் தாலியில் எந்தவித சம்பிரதாயங்கள் அடங்கிய குறியீடுகளுக்கு இடமளிக்காமல் ‘தமிழ்’ எனும் எழுத்தையும் அதனூடே ஆயுத எழுத்தான ஃ-ஐயும் இணைத்து பொறித்துள்ளனர்.
அறம், பொருள், இன்பம் என உலகப் பொதுமறையை இயற்றிய திருவள்ளுவரை சாட்சியாக கொண்டு இந்த இணையேற்பு விழா நடைபெற்றிருப்பதாகவும் இணையர்களின் உறவினர்கள் கூறியுள்ளனர். இந்த நிகழ்வு தமிழ் மீதும் தமிழர்களின் கலாசார, பண்பாடுகள் மீதும் இளைஞர்களுக்கு இருக்கும் பற்றையே எதிரொலிக்கிறது.
Also Read
-
“தமிழ்நாட்டின் இரயில்வே திட்டங்களுக்கான காலக்கெடு என்ன?” : நாடாளுமன்றத்தில் ஆ.இராசா எம்.பி கேள்வி!
-
“VB G RAM G மசோதா என்பது வளர்ச்சி பாரதம் இல்லை, விபரீத பாரதம்!”: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கண்டனம்!
-
“திராவிட மாடல் ஆட்சிக்கான ஒரு மாபெரும் நற்சான்றுதான் 16% வளர்ச்சி!” : அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை!: டிச.18 அன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!
-
2026 சட்டமன்றத் தேர்தல் : கனிமொழி MP தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு - தி.மு.க அறிவிப்பு!