Tamilnadu
”பதக்கம் பெற்ற பெருமிதத்தை விடுத்து அர்ப்பணிப்புடன் பணியாற்றுங்கள்” - சென்னை போலிஸ் கமிஷ்னர் அறிவுரை!
காவல்துறையில் 10 ஆண்டுகள் எந்தவித குற்றச்சாட்டுகளுக்கும் புகார்களுக்கும் உள்ளாகாமல் சிறப்பாக பணியாற்றி வரும் காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டதின் படி சென்னை மாநகர காவல் துறையில் பணியாற்றி வரும் 591 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கத்தை இன்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் வைத்து அணிவித்தார்.
சென்னை மாநகர காவல் துறையில் உள்ள சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு மகளிர் காவல் நிலையம் மத்திய குற்றப்பிரிவு ஆயுதப்படை உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் பணியாற்றும் காவலர்களுக்கு இந்த பதக்கத்தை வழங்கினார்.
இதன் பின்பு காவலர்கள் மத்தியில் பேசிய ஆணையர் சங்கர் ஜிவால் கொரோனா காலத்திலும் முழு அர்ப்பணிப்புடன் காவல்துறையினர் பணியாற்றி உள்ளதாகவும், கொரோனாவால் பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கும் இந்த பதக்கம் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் சென்னை மாநகர காவல் துறையில் 92 சதவீத காவலர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு விட்டதாகவும் சுமார் 52 சதவீத காவலர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பதக்கங்களை பெற்று விட்டோம் என்ற பெருமிதத்துடன் இல்லாமல் எப்போதும் போல முழு அர்ப்பணிப்புடன் காவலர்கள் பணியாற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!