Tamilnadu
சென்னையில் செயல்பாட்டுக்கு வந்தது ஜிகா வைரஸ் கண்டறியும் சோதனை மையம் - வருமுன் காக்கும் தி.மு.க அரசு!
சென்னை தேனாம்பேட்டை பொது சுகாதாரத்துறை இயக்குனரக அலுவலக வளாகத்தில் ஜிகா வைரஸ் தொற்றை கண்டறியும் சோதனை மையம் செயல்பட துவங்கியது.
இதுவரை 65 இடங்களில் கொசுக்களின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் எதிலும் ஜிகா வைரஸ் தொற்று இல்லை என பொது சுகாதாரத் துறை தகவல்.
கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழக எல்லை பகுதி மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் ஜிகா வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை மற்றும் முன்னேற்பாடுகளை தமிழ்நாடு சுகாதாரத்துறை முடுக்கி விட்டுள்ளது.
அதன்படி வழக்கமான பரிசோதனைகளான எலிசா பரிசோதனையைத் தொடர்ந்து பிசிஆர் பரிசோதனையிலும் ஜிகா வைரஸ் கண்டறிய தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு சுகாதாரத் துறை எடுத்து வருகிறது.
இந்நிலையில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகத்தில் ஜிகா வைரஸ் தொற்றை கண்டறியும் சோதனை மையம் செயல்பட தொடங்தியுள்ளது.
இதுவரை கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழகப் பகுதிகளில் 65 இடங்களில் சேகரிக்கப்பட்ட ஏடிஸ் கொசுக்களின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த மாதிரியிலும் ஜிகா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கபடவில்லை என தமிழக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
Also Read
-
மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் பா.ஜ.க அரசு திட்டம்!
-
கொழுந்து விட்டு எரிந்த சொகுசு பேருந்து : 25 பேர் பலி - ஆந்திராவில் நடந்த துயர சம்பவம்!
-
மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் 33 வீரர்கள் : ரூ.43.20 லட்சம் நிதியுதவி வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!