Tamilnadu
“10 ஆண்டுகளாக கவனிக்கப்படாத தொழிலாளர்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்” : பொன்குமார் உறுதி!
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவராக பொன்குமாரை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து பொன்குமார் கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள கட்டுமான தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில், பொன்குமார் நல வாரிய தலைவராகப் பதவியேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வே.கணேசன், இந்து அறநிலைத் துறை அமைச்சர் சேகர் பாபு, பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, தொ.மு.ச பொதுச் செயலாளர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினருமான சண்முகம், தொ.மு.ச பொருளாளர் நடராசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பொன்குமார், “கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவராக நியமித்து முதலமைச்சருக்கு நன்றி. தமிழ்நாட்டிற்குப் புலம்பெயர்ந்து வரும் வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள் நலனைப் பாதுகாப்பதைத் தனது முதல் பணியாக மேற்கொள்வேன். கடந்த பத்து ஆண்டு காலமாகக் கவனிக்கப்படாத தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“தி.மு.க.வை வகுத்தால் தமிழ்நாடு! தமிழ்நாடு மக்களை கூட்டினால் தி.மு.க!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தந்தை பெரியார் பிறந்தநாள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “சமூக நீதி நாள்” உறுதிமொழி ஏற்பு !
-
எதிர்தரப்பு வாதங்களை கேட்காமலே அதானிக்கு ஆதரவாக வெளியான தீர்ப்பு... அதிர்ச்சி அளித்த நீதிபதிகள் !
-
“பச்சை, மஞ்சள் கலர் பஸ்ல யாரு வந்தாலும், கடைசியா பிங்க் கலர் பஸ்தான் ஜெயிக்கும்” - துணை முதலமைச்சர் கலகல!
-
என்றென்றும் ஒலிக்கும் குரல்... அன்றும்.. இன்றும்... என்றும் பெரியார்! - #HBDPeriyar147 !