Tamilnadu
பாட புத்தகங்களிலும் ஒன்றிய அரசு என மாற்ற நடவடிக்கை - திண்டுக்கல் ஐ.லியோனி தகவல்!
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள திண்டுக்கல் ஐ.லியோனி இன்று சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று வாழ்த்துப் பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திண்டுக்கல் லியோனி, மாணவர்கள் பாடங்களை படிப்பதற்கும் கல்வியை சிரமமில்லாமல் படிப்பதற்கும் புதிய கல்வியாக சமச்சீர் கல்வியை கொண்டு வந்தது முத்தமிழறிஞர் கலைஞர்தான் .
தற்போது இந்த பாடங்களில் குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பாட புத்தங்கள் கொண்டு வருவதற்கு அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
வரும் கல்வியாண்டில் பாடநூல்களில் மத்திய அரசு என்ற வார்த்தைக்கு பதிலாக ஒன்றிய அரசு என்று மாற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி தெரிவித்தார்.
Also Read
-
"களத்தில் என்ன செய்யவேண்டும் என எனக்கு தெரியும்" - விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்த விராட் கோலி !
-
”போராடி பெற்ற நமது உரிமைகளை பறிக்கும் மோடி அரசு” : தீஸ்தா சீதல்வாட் குற்றச்சாட்டு!
-
"திறமையற்ற தலைவர் மோடி" - இந்திய பயணத்தை ஒத்திவைத்து சீன பிரதமரை சந்திக்க சென்ற எலான் மஸ்க் !
-
”பொய் மட்டுமே பேசும் ஒரே தலைவர்” : பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி!
-
”தேர்தல் ஆணையம் மீதே சந்தேகங்கள் அதிகம் இருக்கு” : முரசொலி தலையங்கம் சொல்வது என்ன?