Tamilnadu
“மருத்துவர்களின் ஆலோசனைக்கு பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு” : அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
நீட் தேர்வு குறித்து அமைக்கப்பட்ட குழு அறிக்கை அளித்த உடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இது குறித்து அறிவிப்பார் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய முயற்சியால் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவும் என எதிர்பார்க்கக் கூடிய நிலையில், மருத்துவர்களின் ஆலோசனை பெற்று பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். மேலும் மருத்துவர்களின் கருத்துகளின் அடிப்படையிலும், பெற்றோர்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதற்குத் தயாரான சூழல் இருக்கும் பட்சத்தில் பள்ளிகள் திறப்பதற்கான முடிவு எடுக்கப்படும்.
நீட் தேர்வு குறித்து அமைக்கப்பட்ட குழு அறிக்கை அளித்த உடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இது குறித்து அறிவிப்பார். தனியார் பள்ளிகளின் கட்டண நிர்ணய சுற்றறிக்கை ஓரிரு நாட்களில் பள்ளிக் கல்வி துறை மூலம் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“திராவிட மாடல் ஆட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பொற்காலம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
யாருக்காக செயல்படுகிறார் மோடி? : வரியை மீறி ரசியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் இந்தியா!
-
“பிற்போக்குத்தனமான ஒரு இயக்கம் உள்ளது என்றால் அது RSS தான்” - செல்வப்பெருந்தகை விமர்சனம்!
-
“இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நம் முதல்வர்” - துணை முதல்வர் புகழாரம்!
-
9 நாட்கள் சூரிய சக்தி தொழில் முனைவோர் குறித்த பயிற்சி.. எங்கு? எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!