Tamilnadu
"தமிழ்நாட்டில் இரண்டு டெல்டா பிளஸ் பரிசோதனை மையங்கள்": அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
சென்னை கோட்டூர்புரத்தில் குடிசை மாற்று வாரியம் நடத்திய கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்திளார்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்," தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. அதேபோல் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வரை இரண்டு லட்சம் வரை தடுப்பூசி கையிருப்பு உள்ளது.
மேலும், ஒன்றிய அரசின் ஒதுக்கீட்டில் இருந்து நாளைக்குள் தடுப்பூசிகள் கிடைக்கும் . தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ் மையங்கள் இரண்டு இடங்களில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
அதேபோல், இதுவரை செலுத்தியதிலேயே அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 4.73 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. ஜூலை மாத தொகுப்பில் ஒன்றிய அரசு எழுபத்து ஒரு லட்சம் தடுப்பூசிகளைக் கொடுப்பதற்கு முன் வந்து இருக்கிறது. அதில் 10 லட்சம் தடுப்பூசிகள் தற்போது கிடைத்திருக்கிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? தமிழ்நாடு தலைகுனியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
நிதி ஒதுக்காமல் ஏமாற்றும் பிரதமர் மோடி : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்தது தமிழ்நாடு!
-
“இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்” - 80வது முறை கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!
-
கொருக்குப்பேட்டை மேம்பாலம் திறப்பு... எண்ணூர் மேம்பாலத்துக்கு அடிக்கல்.. ஒரே நேரத்தில் அசத்திய முதல்வர்!
-
எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் : உலகம் தழுவிய தமிழ் - அமைச்சர் தங்கம் தென்னரசு!