Tamilnadu
"தமிழ்நாட்டில் இரண்டு டெல்டா பிளஸ் பரிசோதனை மையங்கள்": அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
சென்னை கோட்டூர்புரத்தில் குடிசை மாற்று வாரியம் நடத்திய கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்திளார்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்," தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. அதேபோல் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வரை இரண்டு லட்சம் வரை தடுப்பூசி கையிருப்பு உள்ளது.
மேலும், ஒன்றிய அரசின் ஒதுக்கீட்டில் இருந்து நாளைக்குள் தடுப்பூசிகள் கிடைக்கும் . தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ் மையங்கள் இரண்டு இடங்களில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
அதேபோல், இதுவரை செலுத்தியதிலேயே அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 4.73 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. ஜூலை மாத தொகுப்பில் ஒன்றிய அரசு எழுபத்து ஒரு லட்சம் தடுப்பூசிகளைக் கொடுப்பதற்கு முன் வந்து இருக்கிறது. அதில் 10 லட்சம் தடுப்பூசிகள் தற்போது கிடைத்திருக்கிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“விஸ்வகுரு, விசுவாசம் இல்லாத குருவாகக் காட்டிக் கொண்டுவிட்டார்” - மோடியை விமர்சித்த முரசொலி தலையங்கம்!
-
“பள்ளி விடுமுறை நாட்களில்தான் கூட்டம் கூட்டுவார்..” - விஜய்க்கு தக்க பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி!
-
“இதையெல்லாம் 50 வருடங்களாக பார்த்துவிட்டேன்..” - அவதூறு பரப்புபவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக.. அண்ணா பிறந்தநாளில் அன்புக்கரங்கள் திட்டம் - தொடங்கி வைக்கிறார் முதல்வர்!
-
கிருஷ்ணகிரியில் 2 லட்ச பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.. வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!