Tamilnadu
கஞ்சா விற்ற அ.தி.மு.க நிர்வாகி... 5 பேரை கையும் களவுமாகப் பிடித்த போலிஸ்!
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே பொற்குடையார் சாலையில் கஞ்சா விற்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் போலிஸார் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த மதன் குமார், சகுந்தலா உட்பட ஐந்து பேர் கொண்ட கும்பலை போலிஸார் கையும் களவுமாகப் பிடித்தனர். பின்னர் அவர்களிடமிருந்து கஞ்சாவை போலிஸார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து ஐந்து பேரையும் போலிஸார் கைது செய்தனர். பிறகு போலிஸார் அவர்களிடம் நடத்தி விசாரணையில் மதன்குமார் அ.தி.மு.க தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் என்பது தெரியவந்தது.
அ.தி.மு.க பிரமுகர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இந்திய உரிமையை நிலைநாட்ட பேச்சுவார்த்தை தொடங்குமா ஒன்றிய பா.ஜ.க. அரசு? : முரசொலி தலையங்கம் கேள்வி!
-
“ஏழை மாணவர்களின் விடுதிகள், இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!