Tamilnadu
கஞ்சா விற்ற அ.தி.மு.க நிர்வாகி... 5 பேரை கையும் களவுமாகப் பிடித்த போலிஸ்!
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே பொற்குடையார் சாலையில் கஞ்சா விற்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் போலிஸார் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த மதன் குமார், சகுந்தலா உட்பட ஐந்து பேர் கொண்ட கும்பலை போலிஸார் கையும் களவுமாகப் பிடித்தனர். பின்னர் அவர்களிடமிருந்து கஞ்சாவை போலிஸார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து ஐந்து பேரையும் போலிஸார் கைது செய்தனர். பிறகு போலிஸார் அவர்களிடம் நடத்தி விசாரணையில் மதன்குமார் அ.தி.மு.க தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் என்பது தெரியவந்தது.
அ.தி.மு.க பிரமுகர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்” - 80வது முறை கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!
-
கொருக்குப்பேட்டை மேம்பாலம் திறப்பு... எண்ணூர் மேம்பாலத்துக்கு அடிக்கல்.. ஒரே நேரத்தில் அசத்திய முதல்வர்!
-
எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் : உலகம் தழுவிய தமிழ் - அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல் வேலைவாய்ப்பு வரை... முதலீடுகள் செயலாக்க மாநாட்டில் நிகழ்ந்தது என்ன?
-
ரூ.62.5 கோடியில் UPSC தேர்வுப் பயிற்சி மையக் கட்டடம், செயலி... அறிமுகப்படுத்துகிறார் முதலமைச்சர்!