Tamilnadu
“கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பற்றி கணக்கெடுப்பு பணி துவங்கியது” : அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி!
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு என்று தனியாக அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையத்தை ஆய்வு செய்து, அங்குள்ள வசதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன், “தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கென்று, அன்பு ஆசிரமம், லசால் பள்ளி, முகத்துக்குவியல் குழந்தைகள் மையம், அடைக்கலாபுரம் குழந்தைகள் பாதுகாப்பு மையம் ஆகிய நான்கு இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 361 சிறார்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இந்த மையங்களில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்குக் கல்வி செலவை முழுவதும் அரசு ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குழந்தைகள் குறித்துக் கணக்கெடுப்பு தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 72 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து வருவாய்த் துறை மூலம் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து தற்போது குழந்தை திருமணங்கள் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊராட்சி அளவிலான குழு அமைத்து குழந்தை திருமணங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்” என தெரிவித்தார்.
Also Read
-
“தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது; தேவைப்பட்டால்...” : உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!
-
பாரதிதாசன் விவகாரம் : “பொய் சொல்வதை அமைச்சர் வன்னி அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்” - கோவி.செழியன் பதிலடி!
-
“தலைமை நீதிபதி அவமதிப்பு.. முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்” : வழக்கறிஞர் வில்சன் எம்.பி!
-
“கல்வி உதவித்தொகை வழங்க இவ்வளவு கெடுபிடிகள் ஏன்?” : த.வெ.க அரசுக்கு கனிமொழி எம்.பி கேள்வி!
-
“உரிய முறையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” : அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு கடிதம்!