Tamilnadu
திருவையாறில் மின் பற்றாக்குறை என முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார்: உடனடியாக களத்தில் இறங்கிய திமுக MLA!
தஞ்சாவூர் மாவட்ட ம் திருவையாறு அருகில் உள்ள பொன்னாவரை கிராமத்தில் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாயம் பாதிப்படைந்து வந்த நிலையில் கிராம மக்கள் மனுக்கள் மூலம் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு தெரியப்படுத்தினர்.
அதனையடுத்து மின்சாரத் துறையின் சார்பாக அப்பகுதியில் சுமார் 5.5 லட்சம் மதிப்பில் புதிய டிரான்ஸ்பார்மர் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் தஞ்சை மாவட்ட மின்வாரிய துறை செயற்பொறியாளர் சேகர், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், திருவையாறு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அரசாபகரன், தாசில்தார் நெடுஞ்செழியன் ஆகியோர் இடத்தை ஆய்வு செய்தனர்.
அப்போது சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், சாலை அருகில் குளம் இருப்பதால் அவற்றில் டிரான்ஸ்பார்மர் அமைக்கும்போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு ஏற்பாடுகளை செய்துவிட்டு பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அதனை அடுத்து அவ்வாறு அமைக்கப்படும் என செயற்பொறியாளர் உறுதி அளித்தார். இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் கிராமத்திற்கு நீண்ட நாள் கோரிக்கையான மின்சார பற்றாக்குறையை போக்கும் வகையில் இன்று அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டு சென்றது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்கள்.
Also Read
-
“ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகளின் உண்மையான இருப்பிடம் தமிழ்மண்ணே!” : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
“இல்லாத கல்வித் தகுதியை பெற்றதாக சொல்லும் கல்வி அமைச்சர் ராஜ்மோகன்!” : சரவணன் அண்ணாதுரை விமர்சனம்!
-
“சங்கரன்கோவில் டூ சுவீடன் - பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்...” : தென்காசி இளைஞருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
பணியாளரை காலணியால் தாக்கிய DIG.. காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் : தவெக அரசு மீது சீறும் சண்முகம்!
-
நீட் மோசடி.. NTA அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு ? - உச்ச நீதிமன்றத்தில் பகீர் கிளப்பு புதிய மனு!