Tamilnadu
12 நாட்களில் 500 ஆக்சிஜன் படுக்கைகள்... சேலத்தில் அரசு மருத்துவமனைக்கு நிகரான கொரோனா சிகிச்சை மையம்!
சேலம் இரும்பாலை வளாகத்தில் பன்னிரண்டே நாட்களில் 500 ஆக்சிஜன் படுக்கையுடன் அமைக்கப்பட்ட கொரோ சிறப்புச் சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் திறந்துவைத்தார்.
தற்போது இந்த சிறப்புச் சிகிச்சை மையம் கொரோனா நோயாளிகளின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.மேலும் அரசு மருத்துவமனையில் என்ன கட்டமைப்பு வசதி இருக்குமோ அது அனைத்தும் அங்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகையில், "500 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய இந்த சிறப்பு மையத்தில் கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை அளிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
அரசு மருத்துவமனை எந்த கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளதோ, அதுபோலவே இந்த சிறப்பு மையமும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 500 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் மற்றொரு சிறப்பு கொரேனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும்.
தமிழகத்தில் தி.மு.க அரசு பொறுப்பேற்று 21 நாட்களிலேயே பல்வேறு மருத்துவ கட்டமைப்புகளை மாநிலம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“பாசிஸ்ட்டுகளின் வஞ்சக சூழ்ச்சி தமிழ்நாட்டில் எடுபடாது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு : பா.ஜ.கவின் ஆணவத்துக்கு அடி கொடுத்த நீதிமன்றம் - முரசொலி!
-
“ஒன்றிய விளையாட்டுத் துறையில் 21% நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
ரூ.718 கோடி முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடியது VB-G RAM G முன் வடிவு!” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!