Tamilnadu
12 நாட்களில் 500 ஆக்சிஜன் படுக்கைகள்... சேலத்தில் அரசு மருத்துவமனைக்கு நிகரான கொரோனா சிகிச்சை மையம்!
சேலம் இரும்பாலை வளாகத்தில் பன்னிரண்டே நாட்களில் 500 ஆக்சிஜன் படுக்கையுடன் அமைக்கப்பட்ட கொரோ சிறப்புச் சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் திறந்துவைத்தார்.
தற்போது இந்த சிறப்புச் சிகிச்சை மையம் கொரோனா நோயாளிகளின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.மேலும் அரசு மருத்துவமனையில் என்ன கட்டமைப்பு வசதி இருக்குமோ அது அனைத்தும் அங்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகையில், "500 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய இந்த சிறப்பு மையத்தில் கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை அளிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
அரசு மருத்துவமனை எந்த கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளதோ, அதுபோலவே இந்த சிறப்பு மையமும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 500 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் மற்றொரு சிறப்பு கொரேனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும்.
தமிழகத்தில் தி.மு.க அரசு பொறுப்பேற்று 21 நாட்களிலேயே பல்வேறு மருத்துவ கட்டமைப்புகளை மாநிலம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
சிலிண்டர்களை பதுக்கினால் சிறை… எஸ்மா (ESMA) சட்டம் சொல்வது என்ன? - முழு தகவல் உள்ளே!
-
கச்சா எண்ணெய் விவகாரம் : “டெல்லிக்கு தலைநகர் அமெரிக்காவா?” - முரசொலி தலையங்கம் ஆதங்கம்!
-
தமிழ்நாட்டில் நாங்கள்தான் ஜெயிப்போம்! நாங்கள் மட்டும்தான் ஜெயிப்போம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
'ஸ்டாலின் தொடரட்டும் ; தமிழ்நாடு வெல்லட்டும்' - திருச்சியில் தொடங்கியது தி.மு.க-வின் 12-வது மாநில மாநாடு!
-
ரூ.21.72 கோடியில் முதல்வர் படைப்பகங்கள், பள்ளிக் கட்டடங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!