Tamilnadu
12 நாட்களில் 500 ஆக்சிஜன் படுக்கைகள்... சேலத்தில் அரசு மருத்துவமனைக்கு நிகரான கொரோனா சிகிச்சை மையம்!
சேலம் இரும்பாலை வளாகத்தில் பன்னிரண்டே நாட்களில் 500 ஆக்சிஜன் படுக்கையுடன் அமைக்கப்பட்ட கொரோ சிறப்புச் சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் திறந்துவைத்தார்.
தற்போது இந்த சிறப்புச் சிகிச்சை மையம் கொரோனா நோயாளிகளின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.மேலும் அரசு மருத்துவமனையில் என்ன கட்டமைப்பு வசதி இருக்குமோ அது அனைத்தும் அங்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகையில், "500 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய இந்த சிறப்பு மையத்தில் கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை அளிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
அரசு மருத்துவமனை எந்த கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளதோ, அதுபோலவே இந்த சிறப்பு மையமும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 500 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் மற்றொரு சிறப்பு கொரேனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும்.
தமிழகத்தில் தி.மு.க அரசு பொறுப்பேற்று 21 நாட்களிலேயே பல்வேறு மருத்துவ கட்டமைப்புகளை மாநிலம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !
-
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !
-
மீண்டும் மீண்டும் அவமானப்படும் மோடி! : பொய்களின் மேல் பொய்கள்!
-
"ரிங்கு சிங்கை அணியில் சேர்க்காதது மிகவும் கடினமான முடிவு" - தேர்வுக்குழு தலைவர் அகர்கர் கூறியது என்ன ?
-
தனியார்மயமாக்கலால் குறையும் அரசுப் பணிகள்! : மறைமுகமாக அழிக்கப்படும் இடஒதுக்கீடு!