Tamilnadu
12 நாட்களில் 500 ஆக்சிஜன் படுக்கைகள்... சேலத்தில் அரசு மருத்துவமனைக்கு நிகரான கொரோனா சிகிச்சை மையம்!
சேலம் இரும்பாலை வளாகத்தில் பன்னிரண்டே நாட்களில் 500 ஆக்சிஜன் படுக்கையுடன் அமைக்கப்பட்ட கொரோ சிறப்புச் சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் திறந்துவைத்தார்.
தற்போது இந்த சிறப்புச் சிகிச்சை மையம் கொரோனா நோயாளிகளின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.மேலும் அரசு மருத்துவமனையில் என்ன கட்டமைப்பு வசதி இருக்குமோ அது அனைத்தும் அங்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகையில், "500 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய இந்த சிறப்பு மையத்தில் கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை அளிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
அரசு மருத்துவமனை எந்த கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளதோ, அதுபோலவே இந்த சிறப்பு மையமும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 500 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் மற்றொரு சிறப்பு கொரேனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும்.
தமிழகத்தில் தி.மு.க அரசு பொறுப்பேற்று 21 நாட்களிலேயே பல்வேறு மருத்துவ கட்டமைப்புகளை மாநிலம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!