Tamilnadu
45 ஆண்டு கால சிறு சேமிப்பை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்; காஞ்சியில் நெகிழ்ச்சி !
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாள்தோறும் பல்வேறு கட்டடங்கள் மருத்துவமனையாக மாற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதியாக பொதுமக்களும் நன்கொடையாளர்களும் தங்களால் இயன்றதை தாராளமாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளிக்க முன் வரவேண்டும் என அண்மையில் வேண்டுகோள் விடுத்தார்.
அதன்படி மே 17ம் தேதி வரை இணைவழியில் ரூ.29.44 கோடி, நேரடியாக ரூ. 39.56 கோடி என மொத்தமாக ரூ. 69 கோடி நிதி பெறப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், காஞ்சிபுரம் விரிவாக்கத்தை சேர்ந்த எழுத்தாளர் சிவஞானம் தனது 45 ஆண்டுகால சிறு சேமிப்பான ஒரு லட்சத்தை மாவட்ட ஆட்சியரிடம் முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்தார்.
அதேபோல் பெரிய காஞ்சிபுரத்தை சேர்ந்த சித்த வைத்தியர் நா.கு.கண்ணப்பர் என்ற முதியவர் ரூபாய் ஒரு லட்சத்தை நன்கொடையாக மாவட்ட ஆட்சியரிடம் மகேஸ்வரி இடம் அளித்தார்.
மேலும், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இயங்கி வரும் மேன்டோ தொழிற்சாலை சார்பாக தொழிற்சாலையின் சமூகப் பங்களிப்பு நிதியிலிருந்து 2 மருத்துவ அவசர ஊர்தி வாகனங்கள் மற்றும் 10 ஆக்ஸிஜன் உபகரணங்கள் அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பல்வேறு நபர்கள் கொரோனா நிவாரண நிதிக்கு தங்களது பங்களிப்பை காசோலையாகவும் நேரடியாகவும் வங்கிக் கணக்கிலும் செலுத்தி வருகின்றனர்.
Also Read
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!
-
“தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி!” : முதலீடுகளை ஈர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
தொடர்ந்து 4 நாட்களாக சசிகாந்த் உண்ணாவிரத போராட்டம்.. முதலமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க போராட்டம் முடிவு!
-
"நயினார் நாகேந்திரன் தேவையில்லாமல் வாயை கொடுத்து மாட்டிக்கொள்கிறார்" - அமைச்சர் TRB ராஜா பதிலடி !