Tamilnadu
முதல் பிறந்த நாளை கொரோனா முகாமில் கொண்டாடிய குழந்தை; திருவண்ணாமலை அருகே நெகிழ்ச்சி சம்பவம்!
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த ராஜமாபுரம் கிராமத்தை சேர்ந்த இளம் தம்பதி மற்றும் அவர்களது ஆண் குழந்தைக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அவர்கள் சேத்துப்பட்டில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்ட பிரபு கொரோனா வார்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது. அப்போது அந்த இளம் தம்பதியினர் 10ம் தேதி எங்கள் குழந்தைக்கு முதல் பிறந்த நாள். இதை சிறப்பாக சிறப்பாக கொண்டாட வேண்டும் என திட்டமிட்டு இருந்தோம்.
ஆனால், கொரோனா தொற்று ஏற்பட்டதால் பிறந்தநாள் கொண்டாட முடியவில்லை என கூறியுள்ளனர். இதைக்கேட்ட மருத்துவ அலுவலர் மணிகண்டபிரபு, அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
பின்னர், மருத்துவ அலுவலர் பிறந்த நாள் கேக் மற்றும் இனிப்புகளுடன் வந்து உங்கள் குழந்தையின் பிறந்தநாளை இங்கேய கொண்டாடுவோம் என கூறி பெற்றோரையும், கொரோனா வார்டில் இருந்தவர்களையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து, அங்கிருந்த செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவக்குழுவினருடன் சேர்ந்து அந்த தம்பதி தங்களது குழந்தையின் முதல் பிறந்த நாளை கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடினர்.
Also Read
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ள “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” நூல்!
-
எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு திராவிட மாடல் 2.O அமையும்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி அமைக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
ஜிம்னாஸ்டிக்ஸ் உள்ளிட்ட 20 விளையாட்டுகளுக்கு பயிற்சியாளர்கள் : பணி நியமன ஆணைகளை வழங்கிய துணை முதலமைச்சர்!