Tamilnadu
முதல் பிறந்த நாளை கொரோனா முகாமில் கொண்டாடிய குழந்தை; திருவண்ணாமலை அருகே நெகிழ்ச்சி சம்பவம்!
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த ராஜமாபுரம் கிராமத்தை சேர்ந்த இளம் தம்பதி மற்றும் அவர்களது ஆண் குழந்தைக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அவர்கள் சேத்துப்பட்டில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்ட பிரபு கொரோனா வார்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது. அப்போது அந்த இளம் தம்பதியினர் 10ம் தேதி எங்கள் குழந்தைக்கு முதல் பிறந்த நாள். இதை சிறப்பாக சிறப்பாக கொண்டாட வேண்டும் என திட்டமிட்டு இருந்தோம்.
ஆனால், கொரோனா தொற்று ஏற்பட்டதால் பிறந்தநாள் கொண்டாட முடியவில்லை என கூறியுள்ளனர். இதைக்கேட்ட மருத்துவ அலுவலர் மணிகண்டபிரபு, அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
பின்னர், மருத்துவ அலுவலர் பிறந்த நாள் கேக் மற்றும் இனிப்புகளுடன் வந்து உங்கள் குழந்தையின் பிறந்தநாளை இங்கேய கொண்டாடுவோம் என கூறி பெற்றோரையும், கொரோனா வார்டில் இருந்தவர்களையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து, அங்கிருந்த செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவக்குழுவினருடன் சேர்ந்து அந்த தம்பதி தங்களது குழந்தையின் முதல் பிறந்த நாளை கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடினர்.
Also Read
-
”பழைய இந்து சட்டத்தை உயிர்ப்பிக்கின்ற தீர்ப்பு” : உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கி.வீரமணி கண்டனம்!
-
+2 தேர்வு : எந்தெந்த மாவட்டங்கள் எத்தனை சதவீதம் தேர்ச்சி? - புள்ளி விவரங்களோடு பட்டியல் வெளியீடு !
-
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு : தேர்ச்சி பெற்ற டாப் 3 மாவட்டங்கள் - பட்டியல் இதோ !
-
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - இந்த முறையும் மாணவிகளே சாதனை !
-
“அழிவை உருவாக்க துடிக்கும் பாஜக... சட்டத்தை மாற்ற நினைப்பவர்களை மக்கள் மாற்றுவார்கள்” : முரசொலி சூளுரை!