Tamilnadu
“3,500 இந்து கோவில்கள் புதுப்பிக்கப்பட்டது தி.மு.க ஆட்சியில் தான்” : ஐ.லியோனி பேச்சு!
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட கூடிய க.செல்வராஜை ஆதரித்து பல்வேறு இடங்களில் திண்டுக்கல் ஐ.லியோனி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் தி.மு.கவின் தேர்தல் அறிக்கையை காப்பியடித்து அதிமுக வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் செய்தியாளர் சந்திப்பில் அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கை கசிந்து விட்டதாக நாடகம் ஆடுகிறார்கள் எனத் தெரிவித்தார்.
மேலும் பா.ஜ.க தமிழக மக்களை ஏமாற்றி வருவதாகவும் உண்மையிலேயே இந்துக்களுக்கு நல்லது செய்த ஆட்சியாக தி.மு.க ஆட்சி இருந்து இருப்பதாகவும், 2006 முதல் 11 வரை தி.மு.க ஆட்சியில் 3 ஆயிரத்து 500 இந்து கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் 825 கோவில்கள் மட்டுமே புதுப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார் .
மேலும் இந்து சமய அறநிலைத்துறை துவக்கப்பட்டு தனியாரிடமிருந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் கோவிலுக்கு சொந்தமாகப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கு கோச்சிங் சென்டர் , புத்துணர்வு முகாம் ஆகியவை உருவாக்கப்பட்டதாகும் தெரிவித்து மீண்டும் தி.மு.க ஆட்சி அமைய உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
Also Read
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!
-
ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் கடன் மதிப்பு ரூ.200 லட்சம் கோடியாக உயர்வு! : வெளியான அதிர்ச்சி தகவல்!
-
மின்கழிவுகள் மூலம் ஈட்டிய GST தொகை எவ்வளவு? : நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா MP கேள்வி!