Tamilnadu
மாவட்ட ஆட்சியருக்கு மரண வாக்குமூல கடிதத்தில் கோரிக்கை வைத்த விவசாயி : கோவை அருகே சோகம்!
வாழை விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் உயிரிழந்த நிலையில், இன்று கோவையில் தனியார் வங்கியின் கடன் தொல்லையால் மற்றொரு விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். விவசாயியான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ரிலையன்ஸ் ஹோம்லோன் என்ற தனியார் நிறுவனத்தில் வங்கிக் கடன் பெற்றுள்ளார். பின்னர் கொரோனா ஊரடங்கால் இவரது வாழ்வாதாரம் பெரிதாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆனந்தால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தனியார் வாங்கியிடம் கூறியுள்ளார். ஆனால், அவர்கள் கடனை திருப்பி தர வேண்டும் என ஆனந்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.
இதனால் மன உளைச்சலடைந்த ஆனந்த் மரண வாக்குமூலம் எழுதிவைத்துவிட்டுத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய அந்த கடிதத்தில், “எனது தற்கொலைக்கு ரிலையன்ஸ் ஹோம்லோன் நிறுவனம்தான் காரணம்.மேலும் வங்கியிடம் இருக்கும் தனது வீட்டுப் பத்திரத்தை மீட்டு, எனது குடும்பத்தினரிடம் கொடுக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக் கொள்கிறேன்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றித் தகவலறிந்த காவல்துறையினர் சம்பவம் இடம் விரைந்து உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் தனியார் வங்கிகளின் கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தனியார் வங்கிகளின் அடாவடித்தனத்தை அ.தி.மு.க அரசு கண்டும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. விவசாயிகள் நஷ்டத்திலும், கடன் தொல்லையில் தவித்தபோது, எந்த உதவியும் செய்யாமல், தற்போது தேர்தல் வருவதையொட்டி விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்து, விவசாயிகளை ஏமாற்றி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Also Read
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”