Tamilnadu
மோடி - எடப்பாடி ஆட்சியில் கைவிடப்பட்ட விவசாயிகள் : கடன் தொல்லையால் விபரீத முடிவெடுத்த விவசாயி !
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே பெத்தேல்புரம் கூட்டுவிளைவு பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவர் நெய்யூர், புத்தேரி ஆகிய பகுதியில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து வாழை விவசாயம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாழை விவசாயத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் வாங்கி மீண்டும் வாழை பயிரிட்டுள்ளார். இதுவும் சின்னதம்பிக்கு லாபத்தைக் கொடுக்காமல் நஷ்டத்தையே ஏற்படுத்தியது. இதனால் கடனிலிருந்து மீளமுடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அருகில் உள்ள கால்வாயில் குளித்து விட்டு வருவதாக வீட்டாரிடம் சொல்லிவிட்டு சென்றுள்ளார். மாலைநேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வராததையடுத்து உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். ஆனால், சின்னத்தம்பி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை,
இதையடுத்து, நேற்று காலையில் சின்னத்தம்பி அப்பகுதியில் உள்ள, பெற்றோரின் கல்லறை அருகில் இறந்து கிடப்பதைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி குளச்சல் போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் சின்னத்தம்பியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து போலிஸார் நடத்திய விசாரணையில், வாழை விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் சின்னத்தம்பி விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
எகிப்தின் 70 நிமிட ஆதிக்கம்.. 13 நிமிடங்களில் விஸ்வரூபம் எடுத்த அர்ஜென்டினா : தொடர்கிறது மெஸ்ஸி மேஜிக்!
-
குறைதீர் முகாமில் தவெக அமைச்சர் ரமேஷ் முன் அடாவடி.. கேள்வி கேட்டவர் ஃபோனை பிடிங்கி விரட்டியடிப்பு!
-
‘வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம்.. தவெக அமைச்சர்கள் மீது DVAC-க்கு பறந்த புகார் மனு’ : திமுக அதிரடி!
-
துணைவேந்தர் தேடல் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி… பாஜக-வுக்கு பணியும் தவெக : திமுக எம்.பி. வில்சன் கண்டனம்!
-
மக்களை மட்டுமல்ல யானைகளின் உயிரிழப்பை தடுத்தள்ள தி.மு.க- வின் தொலைநோக்கு திட்டம் : நடந்தது என்ன?