Tamilnadu
சென்னையில் ரூ.90-ஐ எட்டிய பெட்ரோல் விலை.. கொள்ளையடிக்கும் மோடி அரசு.. கதறும் பொது மக்கள்!
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும், வைரஸ் பரவலை தடுக்க மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல் அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.
இதையடுத்து சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய நிலவரப்படி 89.34ரூபாய் என விற்பனை ஆன நிலையில்31 காசுகள் அதிகரித்து இன்று 89.65 ரூபாய் என விற்பனை ஆகிறது
டீசல் விலை நேற்று 82.28ரூபாய் விற்பனை ஆன நிலையில்,33காசுகள் அதிகரித்து 82.61 ரூபாய் என விற்பனை ஆகிறது. இந்த நடைமுறை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.
தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலையால் இருசக்கர வாகனங்களை தவிர்த்துவிட்டு சைக்கிளில் செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டு உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Also Read
-
குஜராத் நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் உறுப்பினர் எதிர்ப்பு... காரணம் என்ன ?
-
உங்களுடன் ஸ்டாலின் : மனுக்களை அளிக்க வந்த பொதுமக்கள்... கலந்துரையாடி, தீர்வுகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு - அமைச்சர் தா.மோ.அன்பரசன் !
-
பள்ளி கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசு... முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் குறிக்கோள் இதுவே!
-
சென்னை மெட்ரோ இரயில் : பூந்தமல்லி To போரூர் வழித்தடத்தில் சோதனைகள் நிறைவு !