Tamilnadu
சீர்கெட்டு கிடக்கும் கே.வி.குப்பம் சுகாதார நிலையம்.. கமிஷனுக்காக மக்கள் நலனில் கோட்டைவிட்ட அதிமுக அரசு!
இந்தியாவிலேயே சுகாதாரத்துறையில் சிறந்து விளங்கியதற்காக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசுக்கு மத்திய பாஜக அரசு கடந்த ஆண்டு விருது வழங்கி கவுரவித்தது. ஆனால் அந்த விருதை பெறுவதற்கான எவ்வித அருகதையும் அற்றதுதான் இந்த பழனிசாமி அரசு. அதற்கு உதாரணமாக பல்வேறு காரணங்கள் உள்ளது.
அதன்படி, வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதியை அடுத்த வடுகன்தாங்கலில் உள்ள சுகாதார நிலையம் நீண்ட நாட்களாக உரிய முறையில் பராமரிக்கப்படாமல் சுகாதார சீர்கெட்டு உள்ளது.
வடுகன் தாங்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள 15 கி.மீ மக்களுக்குமான சுகாதார தேவையை பூர்த்தி செய்யும் நிலையாமாக இது இருந்து வருகிறது. சுமார் 50க்கும் மேற்பட்ட படுக்கை வசதியுடன் செயல்படுகிறது. ஆனால், அங்கு அடிப்படை வசதியான கழிவறை கூட சுத்தமாக இல்லாததால் பயனாளிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
அதுபோக, ஒரே ஒரு செவிலியர் மட்டுமே பெரும்பாலான சமயங்களில் சிகிச்சை அளித்து வருகிறார். மேலும் இந்த சுகாதார நிலையத்துக்கான ஆம்புலன்ஸும் 2 ஆண்டுகளாக ஒரே இடத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆகையால், இதனை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என வடுகன் தாங்கல் மக்கள் பல நாட்களாக கோரி வருகின்றனர்.
பல லட்சம் கணக்கில் கட்டிய கட்டங்களை பராமரிக்காமல் அதற்கான பணியாளர்களை பணியமர்த்தாமல் கணக்கு காண்பித்து கமிஷன் அடிப்பதையே குறிக்கோளாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பழனிசாமி தலமையிலான அதிமுக அரசு தேர்தல் நெருங்கும் வேளையில் மினி க்ளினிக் அமைப்பதாக பூசல் நாடகம் நடத்தி வெற்றிநடை போடும் தமிழகம் என பொய் பிரசாரம் செய்து வருகிறது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!