Tamilnadu
“அடுத்த நான்கு மாதத்திற்கு பிறகு விவசாயிகளின் அனைத்து கடன்களும் ரத்து செய்யப்படும்” : பொன்முடி உறுதி !
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பணப்பாக்கம், அன்ராயநல்லூர் ஆகிய ஊராட்சிகளில் “அ.தி.மு.கவை நிராகரிப்போம்” என்ற மக்கள் கிராம சபை கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் விஸ்வநாதன் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்றது.
இதில். தி.மு.க., துணைப்பொதுச் செயலாளரும் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான க. பொன்முடி கலந்து கொண்டு மக்கள் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பேசிய அவர், “தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான் இலவச கேஸ் அடுப்பு, இலவச வண்ணத் தொலைக்காட்சி, முதியோர் உதவித்தொகை என பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக விவசாயிகளின் 7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான். எனவே மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வரும்போது விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும் என தி.மு.க தலைவர் உறுதி அளித்துள்ளார்.
அதன்படி, இன்னும் நான்கு மாத காலத்திற்குள் விவசாயிகளின் அனைத்து கடன்களும் ரத்து செய்யப்படும் எனவே தமிழக மக்கள் தி.மு.கவிற்கு ஆதரவாக இருக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.கவின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!