Tamilnadu
“சீன கடன் செயலிகளுக்கு அனுமதியில்லை” - சென்னை CCBயின் கடிதத்துக்கு ரிசர்வ் வங்கி விளக்கம்!
சீன கடன் கொடுக்கும் போலி செயலி விவகாரம் தொடர்பாக இந்த செயலியானது, இந்தியாவில் நிதி நிறுவனங்கள் மற்றும் பண பரிவர்த்தனை செய்வதற்கான அனுமதியை கொடுக்கும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவிடம் அனுமதி பெற்றுள்ளதா ?
இது போன்ற செயலிகள் செயல்பட விதிமுறைகள் உள்ளதா ? என்பது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம் மூலம் விவரம் கேட்டு இருந்தனர்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் இந்த கடிதத்திற்கு ஆர்.பி.ஐ விளக்கம் அளித்துள்ளது. அதில் Google Play Store மூலம் அங்கீகாரமற்ற கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்து அதன் மூலமாக லோன் கொடுப்பதற்கு ஆர்.பி.ஐ இன் விதிமுறைகளில் அனுமதி இல்லை ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
இந்தியாவில் செயல்படும் வங்கிகள் மற்றும் அனுமதி பெற்ற நிதி நிறுவனங்களுக்கு மட்டுமே ஆர்பிஐ கடன் கொடுக்கும் உரிமையை வழங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மூலம் கடன் கொடுப்பதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவைகளும் கம்பெனிகள் சட்டப்படி இந்தியாவில் பதிவு செய்யப்பட்டு அதற்கான ஆர்பிஐ விதித்துள்ள விதிமுறைகளின் கீழ் மட்டுமே இயங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம்... திமுக குழுவுடன் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆலோசனை!
-
திராவிட மாடல் ஆட்சியில் இந்து அறநிலையத்துறையின் சாதனை... பட்டியலிட்டு தமிழ்நாடு அரசு பாராட்டு.. - விவரம்!
-
“எமர்ஜென்சியையே பார்த்த இயக்கம் திமுக; உங்களின் சித்து விளையாட்டிற்கு அஞ்சமாட்டோம்”: முதலமைச்சர் ஆவேசம்!
-
“மதத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் அற்பர்கள்...” : பாஜகவை வெளுத்து வாங்கிய முதலமைச்சர் !
-
சிவகங்கையில் மருது சகோதரர்கள் திருவுருவச் சிலை : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!