Tamilnadu
“அதிமுகவை நிராகரிப்போம் எனத் தமிழகம் தயாராகிவிட்டது; தமிழகம் மீளும்”: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று (23-12-2020) காலை, காஞ்சிபுரம் மாவட்டம் - திருப்பெரும்புதூர் தொகுதியில் உள்ள குன்னம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றார்.
அதுபோது, தமிழகத்தைக் கடந்த பத்து ஆண்டுகளாகச் சீரழித்த அ.தி.மு.க. அரசின் ஊழல்களைப் பட்டியலிட்டுக் குற்றப்பத்திரிகையைப் பொதுமக்களிடம் வழங்கினார். பின்னர், கிராமசபைக் கூட்டத்தில் அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்துத் தனது முகநூல் பக்கத்தில்தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “பத்து நாட்களில் 16,500 கிராமங்களில் கிராமசபை/வார்டு கூட்டங்களை திமுக நடத்துகிறது. இன்று, திருப்பெரும்புதூர் தொகுதியின் குன்னம் ஊராட்சியில் கலந்து கொண்டேன்!
அ.தி.மு.க.வை நிராகரிப்போம் (#WeRejectADMK) எனத் தமிழகம் தயாராகிவிட்டது. கலந்துகொண்ட ஒவ்வொருவரின் ஆதரவிலும் இதைப் புரிந்துகொள்ள முடிகிறது! தமிழகம் மீளும்!” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!