Tamilnadu
அரசாணை, சுற்றறிக்கைகளை தொன்மையான தமிழ் மொழியில் வெளியிட்டால் என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!
சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பழனி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் முதல் மொழியாக தமிழையும், இரண்டாம் மொழியாக ஆங்கிலமும் என இரட்டை மொழி கொள்கை பின்பற்றப் பட்ட போதும், தொன்மையான தமிழ்மொழி, அரசு அதிகாரிகளால் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டி உள்ளார்.
அரசின் உத்தரவுகள், அரசாணைகள், சுற்றறிக்கை, கடிதங்கள் ஆகியன ஆங்கிலத்திலேயே தயாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்படுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட மன்றத்தில் நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகள் தமிழில் தயாரிக்கப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கும் நிலையில், அதே நடைமுறையை அரசாணைகள், சுற்றறிக்கைகள், கடிதங்களை தயாரிக்கும்போது பின்பற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக டிஜிபி, காவல் துறை அதிகாரிகளுக்கு பிறப்பித்த உத்தரவில், கடிதங்களை தமிழில் அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளதையும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசுக்கு தான் அனுப்பிய மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தனது மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு மனுவுக்கு மார்ச் 29ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக தலைமைச் செயலாளர், தமிழ் வளர்ச்சி துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
"நடராஜனால் இந்தியா மட்டுமல்ல, உலக கிரிக்கெட்டே மகிழ்ச்சியடையும்" - ஷேன் வாட்சன் கருத்து !
-
சாம்பியன்ஸ் டிராபி கோப்பை : இந்தியா பங்கேற்கும் போட்டிகளை ஒரே மைதானத்தில் நடத்த பாகிஸ்தான் திட்டம் !
-
"பாஜகவுக்கு வாக்களிக்க கூடாது"- சமூக மாநாட்டில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட குஜராத் பொதுமக்கள் !
-
ஆளுநர் மீது பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் - மோடி மவுனமாக இருப்பது ஏன்? : மம்தா பானர்ஜி கேள்வி!
-
அமித்ஷாவை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கொலை மிரட்டல் : தோல்வி அச்சத்தில் பா.ஜ.க!