Tamilnadu
சென்னை, காரைக்கால் மற்றும் 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை மையம் தகவல்!
தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழையும் நாளை லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சம் 23 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும் .
மீனவர்களை எச்சரிக்கை ஏதும் இல்லை. தற்போது வரை தமிழகத்தின் மழைப்பதிவு 43.2 செ.மீ இருப்பதாகவும் 44.7 செ.மீ மழைப்பதிவு டிசம்பர் வரை எதிர்பார்க்க வாய்ப்புள்ளது என்று புவியரசன் கூறியுள்ளார்.
Also Read
-
“அன்று ஓடிப்போனவர், இன்று பேசலாமா? இப்படி ஒரு அரசியல் தேவையா விஜய் சார்?” : டி.கே.எஸ் இளங்கோவன் கண்டனம்!
-
மாற்றம் என்று தவெகவினர் கூறியது : மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் பெயர் மாற்றத்திற்கு கீதாஜீவன் கண்டனம்!
-
விஜயின் திடீர் கரூர் பயணம் எதற்காக? : உண்மையை உரக்கச் சொன்ன முரசொலி!
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!