Tamilnadu
தொடர் மழையால் சேதமடைந்த வெங்காய பயிர்கள் - தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ பார்வையிட்டு அரசுக்கு கோரிக்கை!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் தொடர் மழையால் சேதமடைந்த சின்ன வெங்காய பயிர்களை நேரில் பார்வையிட்டார் முன்னாள் அமைச்சரும் விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் காரியாபட்டி ஒன்றிய பகுதிகளில் முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் 25,000 ஏக்கருக்கும் மேற்பட்ட சின்ன வெங்காய பயிர்கள் திருகல் நோயால் பாதிக்கப்பட்டு சேதமடைந்துள்ளன.
சேதமடைந்த வெங்காய பயிர்களை தி.மு.க முன்னாள் அமைச்சரும் திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்தார்.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த அரசு அதிகாரிகளிடம் வெங்காய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் பயிர் காப்பீட்டு திட்டத்தை விரைந்து செயல்படுத்தவும் அறிவுறுத்தினார்.
உடன் ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், பேரூர் செயலாளர் செந்தில், பொதுக்குழு உறுப்பினர் நவநீதன், வர்த்தகர் அணி செயலாளர் போஸ், ஒன்றிய கவுன்சிலர்கள் சிதம்பரபாரதி, சேகர், கிளைசெயலாளர்கள் மணிகண்டன், முருகன், மாவட்ட பிரதிநிதி சேது, ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Also Read
-
“எமர்ஜென்சியையே பார்த்த இயக்கம் திமுக; உங்களின் சித்து விளையாட்டிற்கு அஞ்சமாட்டோம்”: முதலமைச்சர் ஆவேசம்!
-
“மதத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் அற்பர்கள்...” : பாஜகவை வெளுத்து வாங்கிய முதலமைச்சர் !
-
சிவகங்கையில் மருது சகோதரர்கள் திருவுருவச் சிலை : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்- திறந்து வைத்த CM MK Stalin
-
ரூ.150 கோடி முதலீடு - எல்காட் மற்றும் ஹெச்சிஎல்டெக் நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!