Tamilnadu
சென்னையில் வருமான வரித்துறை அதிகாரியின் கார் மோதி கர்ப்பிணி பெண் உயிரிழப்பு!
வருமான வரித்துறை அதிகாரியின் கார் மோதி கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளார். சென்னை வில்லிவாக்கம் ரங்கதாஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கௌசிபி (26). இவரது கணவர் துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார்.
4 மாத கர்ப்பிணியான கௌசிபி மருத்துவமனைக்குச் சென்று ஸ்கேன் எடுத்தபிறகு கணவரிடம் காட்டிவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து ஏற்படுத்திய காரில் பயணம் செய்த பெண் உடனடியாகத் தப்பிச் சென்றுள்ளார். விபத்து ஏற்படுத்திய கார் வருமான வரித்துறை அதிகாரியுடையது எனத் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்தில் திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலிஸார் மற்றும் ராஜமங்கலம் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கார் மோதி கர்ப்பிணிப் பெண் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மீண்டும் மதமாற்ற தடைசட்டமா?; பா.ஜ.க அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் த.வெ.க : தி.மு.க கண்டனம்!
-
‘பொறுப்பேற்று’ செயல்பட த.வெ.க அரசு மறுப்பதே, பிரச்சனைகள் அதிகரிக்கக் காரணம்! : கனிமொழி கண்டனம்!
-
“SofaModel அரசால் திணிக்கப்படும் இடைத்தேர்தல்.. மக்கள் பாடம் புகட்டுவார்கள்” - உதயநிதி ஸ்டாலின்!
-
டேக் டைவர்ஷன் என ஓடும் ரீல்ஸ் ஆட்சிக்கு.. மக்களே முற்றுப்புள்ளி வைப்பார்கள் - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“தவெக அமைச்சர் சரத்குமார் பதவி விலக வலியுறுத்தி.. திமுக மாணவரணி போராட்டம்.. ஸ்தம்பித்த தமிழ்நாடு”