Tamilnadu
சென்னையில் வருமான வரித்துறை அதிகாரியின் கார் மோதி கர்ப்பிணி பெண் உயிரிழப்பு!
வருமான வரித்துறை அதிகாரியின் கார் மோதி கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளார். சென்னை வில்லிவாக்கம் ரங்கதாஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கௌசிபி (26). இவரது கணவர் துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார்.
4 மாத கர்ப்பிணியான கௌசிபி மருத்துவமனைக்குச் சென்று ஸ்கேன் எடுத்தபிறகு கணவரிடம் காட்டிவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து ஏற்படுத்திய காரில் பயணம் செய்த பெண் உடனடியாகத் தப்பிச் சென்றுள்ளார். விபத்து ஏற்படுத்திய கார் வருமான வரித்துறை அதிகாரியுடையது எனத் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்தில் திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலிஸார் மற்றும் ராஜமங்கலம் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கார் மோதி கர்ப்பிணிப் பெண் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும்!” - ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தல்!
-
பட்டியலின மக்கள் குறித்த இழிவு பேச்சு.. அதிமுக நிர்வாகி கோவை சத்யன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு!
-
SIR விவகாரம் : பொது விவாதத்தில் நாராச பேச்சு.. அதிமுக நிர்வாகி கோவை சத்யனுக்கு குவியும் கண்டனம் - விவரம்!
-
பசும்பொன்னில் தேவர் திருமகனார் பெயரில் ரூ.3 கோடியில் திருமண மண்டபம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
”விடுதலைக்குப் போராடிய தீரர்” : முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!