Tamilnadu
சென்னையில் வருமான வரித்துறை அதிகாரியின் கார் மோதி கர்ப்பிணி பெண் உயிரிழப்பு!
வருமான வரித்துறை அதிகாரியின் கார் மோதி கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளார். சென்னை வில்லிவாக்கம் ரங்கதாஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கௌசிபி (26). இவரது கணவர் துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார்.
4 மாத கர்ப்பிணியான கௌசிபி மருத்துவமனைக்குச் சென்று ஸ்கேன் எடுத்தபிறகு கணவரிடம் காட்டிவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து ஏற்படுத்திய காரில் பயணம் செய்த பெண் உடனடியாகத் தப்பிச் சென்றுள்ளார். விபத்து ஏற்படுத்திய கார் வருமான வரித்துறை அதிகாரியுடையது எனத் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்தில் திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலிஸார் மற்றும் ராஜமங்கலம் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கார் மோதி கர்ப்பிணிப் பெண் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“விஸ்வகுருவுக்கா இந்த நிலைமை? ; உலக நாடுகள் சிரித்திருக்க மாட்டார்களா?” : முரசொலி தலையங்கம்!
-
“1.31 கோடி பெண்களுக்கு ரூ.5,000 சிறப்பு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்...” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
“கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? தமிழ்நாடு தலைகுனியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
நிதி ஒதுக்காமல் ஏமாற்றும் பிரதமர் மோடி : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்தது தமிழ்நாடு!
-
“இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்” - 80வது முறை கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!