Tamilnadu
சென்னையில் வருமான வரித்துறை அதிகாரியின் கார் மோதி கர்ப்பிணி பெண் உயிரிழப்பு!
வருமான வரித்துறை அதிகாரியின் கார் மோதி கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளார். சென்னை வில்லிவாக்கம் ரங்கதாஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கௌசிபி (26). இவரது கணவர் துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார்.
4 மாத கர்ப்பிணியான கௌசிபி மருத்துவமனைக்குச் சென்று ஸ்கேன் எடுத்தபிறகு கணவரிடம் காட்டிவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து ஏற்படுத்திய காரில் பயணம் செய்த பெண் உடனடியாகத் தப்பிச் சென்றுள்ளார். விபத்து ஏற்படுத்திய கார் வருமான வரித்துறை அதிகாரியுடையது எனத் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்தில் திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலிஸார் மற்றும் ராஜமங்கலம் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கார் மோதி கர்ப்பிணிப் பெண் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ஒருவேளை விஜய் வட இந்தியாவில் பிறந்திருந்தால்...” - கழக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தாக்கு!
-
முதலமைச்சருக்கு நன்றி : 'நான் முதல்வன் திட்டத்தில் பயின்று இஸ்ரோவுக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர் !
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!